பொள்ளாச்சி கிருஷ்ணா குளத்திற்கு வந்தடையும் நகராட்சி கழிவுநீரை, சுத்திகரிப்பு செய்து மாற்று இடத்திற்கு கொண்டு செல்வதற்கு விவசாயிகள் எதிர்ப்பு

பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், மழைக் காலங்களில் வெளியேறும் தண்ணீர் மற்றும் பொள்ளாச்சி நகர் சாக்கடை கால்வாய் நீர், முழுவதும் ஜமீன் ஊத்துக்குளி - கிருஷ்ணா குளத்தில் தேங்கும் வகையில் 60 ஆண்டுகளுக்கு முன்பே தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், மழைக் காலங்களில் வெளியேறும் தண்ணீர் மற்றும் பொள்ளாச்சி நகர் சாக்கடை கால்வாய் நீர், முழுவதும் ஜமீன் ஊத்துக்குளி - கிருஷ்ணா குளத்தில் தேங்கும் வகையில் 60 ஆண்டுகளுக்கு முன்பே தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. 



இந்த குளத்தில் தேங்கும் தண்ணீர் ஜமீன் முத்தூர், செல்லாண்டி கவுண்டன்புதூர், ராமபட்டினம் வழியாக செல்கிறது. கிருஷ்ணா குளத்தை நீர் ஆதாரமாக கொண்டு 19 அணைக்கட்டுகளும், அவற்றை ஒட்டி 396 கிணறுகள் மற்றும் 1,897 ஆழ்குழாய் கிணறுகள் உள்ளன. மேலும், ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. 

இந்நிலையில், நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த பட உள்ளதால், பழைய மாட்டு சந்தை இடத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, மாற்று இடத்திற்கு கொண்டு செல்ல அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு, அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 



கிருஷ்ணாகுளம் தடுப்பணை மூலம் பல ஆண்டுகளாக விவசாயிகள் தென்னை உள்ளிட்ட பல்வேறு சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது, கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து மாற்று இடத்திற்கு கொண்டு செல்லும் திட்டத்தால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள், என்று தெரிவித்தனர். விவசாயிகளின் எதிர்ப்பை தொடர்ந்து பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. 

இந்நிலையில், மீண்டும் பணிகள் தொடங்கியுள்ளதால், சார் ஆட்சியர் மற்றும் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்துள்ளோம், பொள்ளாச்சி நகர் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கிருஷ்ணா குளத்திற்கு சொந்தமாகும். அரசு கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து மாற்று இடத்திற்கு கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...