திமுக நிர்வாகி வீட்டில் மூன்றாவது நாளாக வருமானத் துறையினர் விசாரணை: நெஞ்சுவலி காரணமாக பையா கிருஷ்ணன் மருத்துவனையில் அனுமதி

திமுக கோவை மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா என்ற கிருஷ்ணன் வீட்டிற்கு கடந்த 28ந் தேதி காலை, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.



திமுக கோவை மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா என்ற கிருஷ்ணன் வீட்டிற்கு கடந்த 28ந் தேதி காலை, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து மூன்று நாட்களாக நடைபெற்று வந்த சோதனையில், மூன்றாவது நாளான இன்று, பையா கிருஷ்ணன், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை நடைபெற்று வந்தது. 

இந்த நிலையில், இன்று மதியம் பையா கிருஷ்ணனுக்கு இரத்த அழுத்தம் அதிகரித்து, நெஞ்சு வலி ஏற்பட்டது. உடல்நலம் பாதிக்கப்பட்ட இவரை, உடனடியாக காளப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு, தொடர்ந்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இது குறித்து தகவல் அறிந்த திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவரும் மருத்துவமனை முன்பு குவிந்ததால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து, மருத்துவமனையின் வாசல் முன்பு வந்து அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்களை பார்த்து கை அசைத்து விட்டு, மீண்டும் மருத்துவமனைக்குள் சென்றார். 

அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக தான் இந்த சோதனை நடைபெற்று வருவதாக, திமுக தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று அவர் உடல் நலம் பாதிக்கப்பட்ட சம்பவம், கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...