கோவை சிங்காநல்லூர்‌ குளக்கரையில்‌ மாநகராட்சி ஆணையர் நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு!

கோவை: கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட சிங்காநல்லூர்‌ குளக்கரையில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ இன்று நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட சிங்காநல்லூர்‌ குளக்கரையில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ இன்று நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோவை மாநகராட்சியை ஒட்டியுள்ள குளங்களை அரசு மற்றும்‌ மாநகராட்சி தன்னார்வ அமைப்பினருடன்‌ இணைந்து முழு அளவில்‌ குளங்களில்‌ நீர் தேக்கி வைக்கக்கூடிய சூழலில், சிங்காநல்லூர்‌ குளம்‌ சுமார்‌ 288 ஏக்கர்‌ சுற்றளவில்‌ அமைந்துள்ளது. மாநகராட்சியானது சிங்காநல்லூர்‌ குளத்தை 2017-ம்‌ ஆண்டு முதல்‌ நகர்ப்புற பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து பாதுகாத்து வருகிறது.

சிங்காநல்லூர்‌ குளம்‌ சுற்றுச்சூழலுடன்‌ கூடிய குளமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம்‌ மாநகராட்சியுடன்‌ இணைந்து கியூப்‌ என்ற நிறுவனம்‌ இந்த பணியினை செய்து வருகிறது.



சிங்காநல்லூர்‌ குளம்‌ முழு அளவில்‌ நீரை கொள்ளளவு கொண்டு வருவதற்கும்‌, பல்வேறு உயிரினங்களை பராமரிக்கவும்‌ ஒரு சரணாலயம்‌ என்று சொல்லும்‌ அளவிற்கு தன்னார்வ அமைப்பினருடன்‌ இணைந்து குளத்தின்‌ கரைப்‌ பகுதிகளில்‌ பல வகையான மரங்கள்‌ வளர்க்கப்பட்டு, பலவகையான பறவைகள்‌, பூச்சி இனங்கள்‌ வாழும் சூழலுக்கேற்ப அமைந்துள்ளது.



இந்நிலையில், இந்த குளத்தினை பார்வையிட்ட ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ அங்கு வளர்க்கப்பட்டு வரும்‌ தாவரங்களின்‌ வகைப்பாட்டினை கேட்டறிந்தும்‌, பறவைகள்‌ மற்றும்‌ பூச்சி இனங்கள்‌ வாழ்வதற்கான சூழலைக் கேட்டறிந்தும்‌, குளக்கரையினை சுற்றி சுமார்‌ 2 கி.மீ தொலைவிற்கு நடந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வின் போது, மாநகரப்‌ பொறியாளர்‌ ஆ.லட்சுமணன்‌, கிழக்கு மண்டல உதவி ஆணையர்‌ முருகன்‌, உதவி செயற்பொறியாளர்‌ பிரபாகரன்‌, மண்டல சுகாதார அலுவலர்‌ சந்திரன்‌, உதவிப்‌ பொறியாளர்‌ சரவணன்‌ மற்றும்‌ தன்னார்வ அமைப்பினர்கள் ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 15...