கோவை: கோவை மாவட்டத்தில் பணியின் போது உயிரிழந்த காவலர்களுக்கு, மதுக்கரை போலீஸார் மற்றும் பொதுமக்கள், இன்று மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.
கோவை: கோவை மாவட்டத்தில் பணியின் போது உயிரிழந்த காவலர்களுக்கு, மதுக்கரை போலீஸார் மற்றும் பொதுமக்கள், இன்று மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21 ஆம் தேதி காவலர் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. மேலும், இந்த ஆண்டு அக்டோபர் மாதம் முழுவதும் கோவை மாவட்டத்தில் பணியின் போது உயிரிழந்த காவலர்களுக்கு மலர் அஞ்சலி மற்றும் வீரவணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, கோவை மதுக்கரை போலீஸ் சார்பில் குவாரி ஆபிஸ் அருகே, கோவை மாவட்டத்தில் பணியின் போது உயிர் தியாகம் செய்த காவலர்கள் படத்திற்கு மதுக்கரை ஆய்வாளர் முருகேசன், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட போலீஸார் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.

மேலும், அங்கு வந்த பொதுமக்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து பள்ளி மாணவிகள் மற்றும் நடக கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21 ஆம் தேதி காவலர் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. மேலும், இந்த ஆண்டு அக்டோபர் மாதம் முழுவதும் கோவை மாவட்டத்தில் பணியின் போது உயிரிழந்த காவலர்களுக்கு மலர் அஞ்சலி மற்றும் வீரவணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, கோவை மதுக்கரை போலீஸ் சார்பில் குவாரி ஆபிஸ் அருகே, கோவை மாவட்டத்தில் பணியின் போது உயிர் தியாகம் செய்த காவலர்கள் படத்திற்கு மதுக்கரை ஆய்வாளர் முருகேசன், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட போலீஸார் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.
மேலும், அங்கு வந்த பொதுமக்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து பள்ளி மாணவிகள் மற்றும் நடக கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.