கோவை: திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து, கோவையில் அதிமுக வினர் பல்வேறு இடங்களில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து, கோவையில் அதிமுக வினர் பல்வேறு இடங்களில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்தில், கோவையில் பல்வேறு இடங்களில், தி.மு.க.தலைவர் ஸ்டாலின், பொது செயலாளர், துரைமுருகன், எம் பி கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாக போஸ்டர் ஒட்டப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை கண்டிக்கும் வகையில், கடந்த 27 ஆம் தேதி, கோவையில் தி.மு.க இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய, உதயநிதி ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் மீது காவல் துறையின் அனுமதியை மீறி கூட்டம் நடத்தியது, அவதூறாக பேசியது, பேரிடர் காலங்களில் நோய் பரப்பியது உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.
அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
அமைச்சர் எஸ் பி வேலுமணியை அவதூறாக பேசியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், திமுகவின் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கோவை மாவட்ட நிர்வாகிகளை கண்டித்து, அதிமுக சார்பில் கோவை மாநகரில் 25 க்கும் மேற்பட்ட இடங்களில் 10000 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உதயநிதி ஸ்டாலின், தமிழக முதலமைச்சர் மற்றும் உள்ளாட்சிதுறை அமைச்சரை இழிவு படுத்தி பேசியதை வன்மையாக கண்டிப்பதாகவும், ஊழலுக்காக கலைக்கப்பட்ட கட்சிி திமுக என்று கோஷங்கள் எழுப்பினர்.
மேலும், 2ஜி ஊழலில் எம் பி ராஜாவும், கனிமொழியும் சிறைக்கு செல்வார்கள் எனவும், சர்க்காரியா உழல் என்னாச்சு..? என்பது போன்ற பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், கோவையில் அண்மையில் ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக, மீது வழக்கு பதிந்த காவல் துறை, தற்போது போராட்டம் நடத்தும் அதிமுகவினர் மீது வழக்கு பதிவு செய்வார்களா? என்று திமுக கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர், நா கார்த்திக் கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர் கட்சியை கண்டித்து ஆளும் கட்சியினர் நடத்தும் இந்த போராட்டம் அரசியல் வட்டாரத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.