கொரோனா காலத்தில்‌ 11,600 சிறை கைதிகளுக்கு ஈஷா சார்பில் யோகா பயிற்சி - 3,971 சிறை ஊழியர்கள் பங்கேற்பு!

கோவை: கொரோனா வைரஸ்‌ பாதிப்பு மிகுந்த இக்கட்டான சூழலில்‌ தமிழகம்‌ முழுவதும்‌ உள்ள அனைத்து மத்திய சிறைச்சாலைகளிலும்‌ உள்ள கைதிகள்‌ மற்றும்‌ ஊழியர்களுக்கு ஈஷா யோகா ஆசிரியர்கள்‌ ஆன்லைன்‌ மூலம்‌ யோகா கற்றுக்கொடுத்தனர்‌.


கோவை: கொரோனா வைரஸ்‌ பாதிப்பு மிகுந்த இக்கட்டான சூழலில்‌ தமிழகம்‌ முழுவதும்‌

உள்ள அனைத்து மத்திய சிறைச்சாலைகளிலும்‌ உள்ள கைதிகள்‌ மற்றும்‌ ஊழியர்களுக்கு ஈஷா யோகா ஆசிரியர்கள்‌ ஆன்லைன்‌ மூலம்‌ யோகா

கற்றுக்கொடுத்தனர்‌.

இந்த யோகா வகுப்புகள்‌ சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர், சேலம்‌, கடலூர்‌, பாளையங்கோட்டை உள்ளிட்ட இடங்களில்‌ இருக்கும்‌ மத்திய சிறைச்சாலைகள்‌ மற்றும்‌ பெண்களுக்கான சிறப்பு சிறைச்சாலைகளில்‌ கடந்த ஜூலை, ஆகஸ்ட்‌, செப்டம்பர்‌ ஆகிய மாதங்களில்‌ நடத்தப்பட்டது.



இதில்‌ 8,165 ஆண்‌ கைதிகள்‌, 3,453 பெண்‌ கைதிகள்‌, 3,018 ஆண்‌ ஊழியர்கள்‌, 953 பெண்‌ ஊழியர்கள்‌ உட்பட மொத்தம்‌ 15,589 பங்கேற்று பயன்பெற்றனர்‌. அவர்களின்‌ நோய்‌ எதிர்ப்பு சக்தி மற்றும்‌ நுரையீரல்‌ திறனை அதிகரிப்பதற்காக 'சிம்ம க்ரியா' என்ற பயிற்சியும்‌, உடல்‌ மற்றும்‌ மனதளவில்‌ அமைதியாகவும்‌ சமநிலையாகவும்‌ இருப்பதற்காக யோக நமஸ்காரம்‌' மற்றும்‌ ஈஷா க்ரியா' ஆகிய பயிற்சிகளும்‌ கற்றுக்கொடுக்கப்பட்டன.

அரசின்‌ வழிகாட்டுதல்‌ நெறிமுறைகளின்படி, சமூக இடைவெளியுடன்‌ தனித்‌தனி குழுக்களாக வகுப்புகள்‌ நடத்தப்பட்டது. இவ்வகுப்புகள்‌ தங்களுக்கு பெரிதும்‌ பயன்‌தரும்‌ வகையில்‌ இருந்ததாக சிறைத்‌துறை உயர்‌ அதிகாரிகள்‌ தெரிவித்தனர்‌.

தமிழகம்‌ முழுவதும்‌ உள்ள சிறைச்சாலைகளில்‌ கடந்த 28 ஆண்டுகளாக இலவச யோகா வகுப்புகளை ஈஷா யோகா மையம்‌ நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று, நீலகிரி, திருப்பூர்‌, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில்‌ பணியாற்றும்‌ காவல்துறையினருக்கும்‌ கொரோனா காலத்தில்‌ இலவச யோகா வகுப்புகள்‌ நடத்தப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...