கோவை: ஒரிசா மாநிலத்தை சேர்ந்தவர் சம்புசிங் (36), ராம்வியா யாதவ் (31) உள்பட 17 வட மாநில தொழிலாளர்கள், பொள்ளாச்சி தேவனாம்பாளையத்தில் இருந்து குளத்துப்பாளையத்தில் உள்ள தனியார் இரும்பு தொழிற்சாலைக்கு நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக மினி லாரியில் சென்றுள்ளனர்.
கோவை: ஒரிசா மாநிலத்தை சேர்ந்தவர் சம்புசிங் (36), ராம்வியா யாதவ் (31) உள்பட 17 வட மாநில தொழிலாளர்கள், பொள்ளாச்சி தேவனாம்பாளையத்தில் இருந்து குளத்துப்பாளையத்தில் உள்ள தனியார் இரும்பு தொழிற்சாலைக்கு நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக மினி லாரியில் சென்றுள்ளனர்.
லாரியை, ராம்வியா யாதவ் ஒட்டி வந்த நிலையில், குளத்துப்பாளையம் அருகே வரும் போது, நிலைதடுமாறி மினிலாரி கீழே கவிழ்ந்தது. இதில், சம்புசிங் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், லாரியில் பயணம் செய்த 16 பேருக்கும் காயம் ஏற்பட்டது.
காயம் அடைந்த அனைவரும் பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து, நெகமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாரியை, ராம்வியா யாதவ் ஒட்டி வந்த நிலையில், குளத்துப்பாளையம் அருகே வரும் போது, நிலைதடுமாறி மினிலாரி கீழே கவிழ்ந்தது. இதில், சம்புசிங் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், லாரியில் பயணம் செய்த 16 பேருக்கும் காயம் ஏற்பட்டது.
காயம் அடைந்த அனைவரும் பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து, நெகமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.