நீலகிரி: குன்னூர் அருகே பழைய அருவங்காடு பகுதியில் கஞ்சா செடி பயிரிட்டிருந்த உபதலை ஆலோரை கிராமப் பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவரை அருவங்காடு காவல் ஆய்வாளர் பிலிப் உள்ளிட்ட காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நீலகிரி: குன்னூர் அருகே பழைய அருவங்காடு பகுதியில் கஞ்சா செடி பயிரிட்டிருந்த உபதலை ஆலோரை கிராமப் பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவரை அருவங்காடு காவல் ஆய்வாளர் பிலிப் உள்ளிட்ட காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் இளம் மாணவ, மாணவர்கள் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், இதற்கு தீர்வு காணும் வகையில் குன்னூரில் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையில் தனிப்படையினர் அமைக்கப்பட்டு ஆங்காங்கே சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த வாரம் குன்னூர் சித்தி விநாயகர் கோவில் தெரு பகுதியில் நடத்திய சோதனையில் வீடுகளிலேயே கஞ்சா செடிகள் வளர்த்து வந்த சித்தி விநாயகர் கோயில் பகுதியைச் சேர்ந்த அன்புமணி, சிவா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், இதே பகுதியில் கஞ்சா வைத்திருந்த வினோத் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், காவல் துறையினரின் தொடர் தேடுதலில் பழைய அருவங்காடு பகுதியில் உள்ள தோட்டத்தில் கெஞ்சா செடி பயிரிட்டது தொடர்பாக உபதலை ஆலோரை கிராமத்தைச் சேர்ந்த ஜார்ஜ் (42) என்பவரை அருவங்காடு காவல் ஆய்வாளர் பிலிப் உள்ளிட்ட காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குன்னூர் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா புழக்கம் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் என்று காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் இளம் மாணவ, மாணவர்கள் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், இதற்கு தீர்வு காணும் வகையில் குன்னூரில் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையில் தனிப்படையினர் அமைக்கப்பட்டு ஆங்காங்கே சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த வாரம் குன்னூர் சித்தி விநாயகர் கோவில் தெரு பகுதியில் நடத்திய சோதனையில் வீடுகளிலேயே கஞ்சா செடிகள் வளர்த்து வந்த சித்தி விநாயகர் கோயில் பகுதியைச் சேர்ந்த அன்புமணி, சிவா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், இதே பகுதியில் கஞ்சா வைத்திருந்த வினோத் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், காவல் துறையினரின் தொடர் தேடுதலில் பழைய அருவங்காடு பகுதியில் உள்ள தோட்டத்தில் கெஞ்சா செடி பயிரிட்டது தொடர்பாக உபதலை ஆலோரை கிராமத்தைச் சேர்ந்த ஜார்ஜ் (42) என்பவரை அருவங்காடு காவல் ஆய்வாளர் பிலிப் உள்ளிட்ட காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குன்னூர் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா புழக்கம் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் என்று காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.