நீலகிரி: குன்னூர் அருகே அட்டடி பகுதியில் காட்டு எருமை தாக்கி வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி: குன்னூர் அருகே அட்டடி பகுதியில் காட்டு எருமை தாக்கி வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் சமீப காலமாக காட்டு எருமை நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, குடியிருப்பு பகுதிகளிலேயே உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், குன்னூர் அருகே அட்டடி பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார்(26). இவர் வீட்டுக்கு வெளியே சென்ற போது, புதர் மறைவில் நின்றிருந்த காட்டு எருமை இவரை நோக்கி பாய்ந்து வயிற்றுப் பகுதியில் குத்தி தூக்கி வீசியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர், இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் ரஞ்சித்குமாரின் உடலை கைப்பற்றி, குன்னூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
காட்டு எருமைகள் அடிக்கடி பொதுமக்களை தாக்கி உயிரிழப்புகள், படுகாயங்கள் ஏற்பட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் காட்டு எருமைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டி விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, உதவி வனப்பாதுகாவலர் சரவணன் மற்றும் குன்னூர் கோட்ட வன அலுவலர் சசிக்குமார் உயிரிழந்த ரஞ்சித் குமார் குடும்பத்திற்கு நிவாரண நிதியாக 4 லட்சம் ரூபாயில் முன் பணமாக ரூ.50 ஆயிரத்தினை அவரது மனைவி நித்தியாவிடம் வழங்கினார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் சமீப காலமாக காட்டு எருமை நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, குடியிருப்பு பகுதிகளிலேயே உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், குன்னூர் அருகே அட்டடி பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார்(26). இவர் வீட்டுக்கு வெளியே சென்ற போது, புதர் மறைவில் நின்றிருந்த காட்டு எருமை இவரை நோக்கி பாய்ந்து வயிற்றுப் பகுதியில் குத்தி தூக்கி வீசியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர், இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் ரஞ்சித்குமாரின் உடலை கைப்பற்றி, குன்னூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
காட்டு எருமைகள் அடிக்கடி பொதுமக்களை தாக்கி உயிரிழப்புகள், படுகாயங்கள் ஏற்பட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் காட்டு எருமைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டி விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, உதவி வனப்பாதுகாவலர் சரவணன் மற்றும் குன்னூர் கோட்ட வன அலுவலர் சசிக்குமார் உயிரிழந்த ரஞ்சித் குமார் குடும்பத்திற்கு நிவாரண நிதியாக 4 லட்சம் ரூபாயில் முன் பணமாக ரூ.50 ஆயிரத்தினை அவரது மனைவி நித்தியாவிடம் வழங்கினார்.