கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக தனியார் துறையில் வேலை வாய்ப்புக்கு வேலை அளிப்போர், வேலை தேடுவோர் சந்திப்பு நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமை கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது.
இம்மாதத்திற்கான நிகழ்வு வரும் 11ம் தேதியன்று காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த தனியார் நிறுவன வேலைவாய்ப்பு நேர்காணல் நிகழ்ச்சியில் படிக்காதவர்கள் முதல் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, அனைத்து பட்டதாரி, ஐடிஐ உள்ளிட்ட படிப்பில் சான்றிதல் பெற்றவர்கள் மற்றும் டிப்ளமோ உள்ளிட்ட பிரிவிலும் கல்வித் தகுதி உடையவர்களுக்கு நேர்காணல் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியின் மூலம் வேலை பெறும் மனுதாரர்களில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு நிகழ்ச்சியில் மனுதாரர்கள் பெருமளவில் கலந்துகொண்டு வேலைவாய்ப்பினை பெற்று பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இம்மாதத்திற்கான நிகழ்வு வரும் 11ம் தேதியன்று காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த தனியார் நிறுவன வேலைவாய்ப்பு நேர்காணல் நிகழ்ச்சியில் படிக்காதவர்கள் முதல் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, அனைத்து பட்டதாரி, ஐடிஐ உள்ளிட்ட படிப்பில் சான்றிதல் பெற்றவர்கள் மற்றும் டிப்ளமோ உள்ளிட்ட பிரிவிலும் கல்வித் தகுதி உடையவர்களுக்கு நேர்காணல் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியின் மூலம் வேலை பெறும் மனுதாரர்களில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு நிகழ்ச்சியில் மனுதாரர்கள் பெருமளவில் கலந்துகொண்டு வேலைவாய்ப்பினை பெற்று பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.