கோவையில் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த இன்ஜினியர் மாடியில் இருந்து தவறி விழுந்ததில் உயிரிழப்பு - போலீசார் விசாரணை!

கோவை: கோவையில் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த இன்ஜினியர் மாடியில் இருந்து தவறி விழுந்ததில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த இன்ஜினியர் மாடியில் இருந்து தவறி விழுந்ததில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வடவள்ளி நவாவூர் பிரிவு பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்(41) கட்டுமான பொறியாளர் பணி செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். நேற்று முன்தினம் சதீஷ்குமார் வீட்டின் மூன்றாவது மாடியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் விட்டுக் கொண்டு இருந்தார்.

அப்போது, எதிர்பாராத விதமாக கால் தடுமாறி மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து, சதீஷ்குமாரை மீட்ட அவரது குடும்பத்தினர் அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சதீஷ்குமார் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல, மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் குர்ஆன் (35). இவர் சிறுமுகை பகுதியில் தங்கி தோட்ட வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், சம்பவத்தன்று இவர் ஆலங்குளம் பகுதியில் உள்ள பவானி ஆற்றில் குளிக்கச் சென்ற போது, எதிர்பாராதவிதமாக ஆற்றில் தவறி விழுந்தார் இதில் சுரேஷ் நீரில் முழுகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிறுமுகை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...