கோவை: கோவை வீரபாண்டி பிரிவில், இருந்து வீரபாண்டி செல்லும் சாலையில் உள்ள ரயில்வே சுரங்க பாதையின் உயர தடுப்பு சாய்ந்த நிலையில், கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால், அப்பகுதியை கடந்து செல்லும் மக்கள் அச்சத்துடன் செல்கிறார்கள்.
கோவை: கோவை வீரபாண்டி பிரிவில், இருந்து வீரபாண்டி செல்லும் சாலையில் உள்ள ரயில்வே சுரங்க பாதையின் உயர தடுப்பு சாய்ந்த நிலையில், கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால், அப்பகுதியை கடந்து செல்லும் மக்கள் அச்சத்துடன் செல்கிறார்கள்.

கோவை வீரபாண்டி பிரிவில் இருந்து வீரபாண்டி செல்லும் சாலை வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். வீரபாண்டியில் இருந்து அன்னூர், கோவில்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லவும் இச்சாலை பயன்படுத்தப்படுகிறது. இதனிடையே, வீரபாண்டி பிரிவில் இருந்து வீரபாண்டி செல்லும் சாலையின் குறுக்கே, கோவை- மேட்டுப்பாளையம் செல்லக்கூடிய ரயில் தடம் உள்ளது.

இந்த ரயில் தடம் கீழ் பகுதியில் வாகனங்கள் செல்லக்கூடிய வகையில் சாலை அமைந்துள்ளது. இதனிடையே, ரயில்வே சுரங்கப்பாதை வழியாக கனரக வாகனங்கள் உயரம் அளவு தெரியாமல் மோதி விடாமல் இருக்க சுரங்க பாதை இரு புறங்களிலும் உயர தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.

இதில் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் சில சமயங்களில் மோதி, அந்த தடுப்பு சேதமாவது வழங்கம். அதே போல், பல மாதங்களுக்கு முன் சேதமான அந்த உயர தடுப்பு, தற்போது சாய்ந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால், அப்பகுதியில் செல்வோர் அச்சதுடன் பயணிக்கின்றனர்.

இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த நியூட்டன் என்பவர் கூறுகையில், "சுமார் ஆறு மாதத்திற்கும் மேலாக இந்த தடுப்பு சாய்ந்த நிலையில் தான் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளததால், பெரும் உயிர்சேதம் ஏதேனும் ஏற்படும் முன், அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் உடனடியாக இதனை சீர் செய்ய வேண்டும்," என்றார்.
இதுகுறித்து ரயில்வே துறை அதிகாரிகள் கூறுகையில், " சேதமான நிலையில் உள்ள உயர தடுப்பு உடனடியாக சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது," என்றார்.

கோவை வீரபாண்டி பிரிவில் இருந்து வீரபாண்டி செல்லும் சாலை வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். வீரபாண்டியில் இருந்து அன்னூர், கோவில்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லவும் இச்சாலை பயன்படுத்தப்படுகிறது. இதனிடையே, வீரபாண்டி பிரிவில் இருந்து வீரபாண்டி செல்லும் சாலையின் குறுக்கே, கோவை- மேட்டுப்பாளையம் செல்லக்கூடிய ரயில் தடம் உள்ளது.

இந்த ரயில் தடம் கீழ் பகுதியில் வாகனங்கள் செல்லக்கூடிய வகையில் சாலை அமைந்துள்ளது. இதனிடையே, ரயில்வே சுரங்கப்பாதை வழியாக கனரக வாகனங்கள் உயரம் அளவு தெரியாமல் மோதி விடாமல் இருக்க சுரங்க பாதை இரு புறங்களிலும் உயர தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.

இதில் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் சில சமயங்களில் மோதி, அந்த தடுப்பு சேதமாவது வழங்கம். அதே போல், பல மாதங்களுக்கு முன் சேதமான அந்த உயர தடுப்பு, தற்போது சாய்ந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால், அப்பகுதியில் செல்வோர் அச்சதுடன் பயணிக்கின்றனர்.

இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த நியூட்டன் என்பவர் கூறுகையில், "சுமார் ஆறு மாதத்திற்கும் மேலாக இந்த தடுப்பு சாய்ந்த நிலையில் தான் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளததால், பெரும் உயிர்சேதம் ஏதேனும் ஏற்படும் முன், அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் உடனடியாக இதனை சீர் செய்ய வேண்டும்," என்றார்.
இதுகுறித்து ரயில்வே துறை அதிகாரிகள் கூறுகையில், " சேதமான நிலையில் உள்ள உயர தடுப்பு உடனடியாக சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது," என்றார்.