பொள்ளாச்சி: அரசு செய்யும் நல்ல திட்டங்களை விமர்சனம் செய்யும் மு.க.ஸ்டாலின் பேச்சை தமிழக மக்கள் நகைச்சுவையாக தான் பார்க்கிறார்கள், என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டியளித்துள்ளார்.
பொள்ளாச்சி: அரசு செய்யும் நல்ல திட்டங்களை விமர்சனம் செய்யும் மு.க.ஸ்டாலின் பேச்சை தமிழக மக்கள் நகைச்சுவையாக தான் பார்க்கிறார்கள், என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டியளித்துள்ளார்.

பொள்ளாச்சி அருகே உள்ள பெரிய நெகமம் பேரூராட்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகள் அடங்கிய பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விலையில்லாத மருந்து பெட்டகங்களை வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின்போது, கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட உடன் மக்களுக்கு இலவசமாக போடப்படும் என்று தமிழக முதல்வர் மக்கள் மீது உள்ள நல் எண்ணத்தின் அடிப்படையில் கூறியுள்ளார். இதையும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மு.க.ஸ்டாலின் பாராட்டாமல், விமர்சனம் செய்துள்ளார்.
தமிழக அரசு எந்த திட்டத்தை அறிவித்தாலும் மு.க.ஸ்டாலின் ஏட்டிக்குப் போட்டியாக பேசுவதையே, அவரது வேலையாக வைத்துள்ளார், என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள். ஸ்டாலினின் பேச்சை தமிழக மக்கள் நகைச்சுவையாக தான் நினைக்கிறார்கள், என்று தெரிவித்தார்.

பொள்ளாச்சி அருகே உள்ள பெரிய நெகமம் பேரூராட்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகள் அடங்கிய பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விலையில்லாத மருந்து பெட்டகங்களை வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின்போது, கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட உடன் மக்களுக்கு இலவசமாக போடப்படும் என்று தமிழக முதல்வர் மக்கள் மீது உள்ள நல் எண்ணத்தின் அடிப்படையில் கூறியுள்ளார். இதையும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மு.க.ஸ்டாலின் பாராட்டாமல், விமர்சனம் செய்துள்ளார்.
தமிழக அரசு எந்த திட்டத்தை அறிவித்தாலும் மு.க.ஸ்டாலின் ஏட்டிக்குப் போட்டியாக பேசுவதையே, அவரது வேலையாக வைத்துள்ளார், என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள். ஸ்டாலினின் பேச்சை தமிழக மக்கள் நகைச்சுவையாக தான் நினைக்கிறார்கள், என்று தெரிவித்தார்.