கோவை: வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் இன்று வால்பாறை நகராட்சி ஆணையாளர் டாக்டர் பவுன்ராஜ் ஆணைப்படி வால்பாறை நகராட்சி மேலாளர் நஞ்சுண்டன், ஓ.எஸ்.ஆர் சிவகுமார் மின் பொறியாளர் சுரேஷ் தலைமையில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.
கோவை: வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் இன்று வால்பாறை நகராட்சி ஆணையாளர் டாக்டர் பவுன்ராஜ் ஆணைப்படி வால்பாறை நகராட்சி மேலாளர் நஞ்சுண்டன், ஓ.எஸ்.ஆர் சிவகுமார் மின் பொறியாளர் சுரேஷ் தலைமையில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.
நகராட்சியில் உள்ள அனைத்து வாகனங்களையும் சுத்தம் செய்து, மாலை அணிவித்து பட்டாசுகள் வெடித்து கொண்டாடப்பட்டது.

இதில் நகராட்சி அலுவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் ஓட்டுநர்கள் என சுமார் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் அனைத்து பணியாளர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதனை தொடர்ந்து, வாகனங்கள் வால்பாறை பிரதான சாலைகளில் வலம் வந்து பின்னர் அலுவலகத்தை அடைந்தது. இதனால் துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் நகராட்சி ஆணையருக்கு நன்றி தெரிவித்தனர்.
நகராட்சியில் உள்ள அனைத்து வாகனங்களையும் சுத்தம் செய்து, மாலை அணிவித்து பட்டாசுகள் வெடித்து கொண்டாடப்பட்டது.
இதில் நகராட்சி அலுவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் ஓட்டுநர்கள் என சுமார் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் அனைத்து பணியாளர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதனை தொடர்ந்து, வாகனங்கள் வால்பாறை பிரதான சாலைகளில் வலம் வந்து பின்னர் அலுவலகத்தை அடைந்தது. இதனால் துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் நகராட்சி ஆணையருக்கு நன்றி தெரிவித்தனர்.