கோவை: மனுதர்ம நூலை தடை செய்ய வலியுறுத்தி கோவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனுதர்ம நூலை போராட்டக்காரர்கள் எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: மனுதர்ம நூலை தடை செய்ய வலியுறுத்தி கோவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனுதர்ம நூலை போராட்டக்காரர்கள் எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்ம நூலை தடை செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், மக்கள் அதிகாரம், எஸ்டிபிஐ உட்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்ம நூலை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
மேலும், நடிகை குஷ்பு மனுதர்ம நூலை முழுமையாக படிக்க வேண்டும் எனவும் தேவைப்பட்டால் அவருக்கு நூறு மனுதர்ம நூல்களை வாங்கி அனுப்ப தயாராக இருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தெரிவித்தனர்.

இந்த போராட்டத்தில் போது மனுதர்ம நூலை போராட்டக்காரர்கள் எரிக்க முயன்றபோது அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்ம நூலை தடை செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், மக்கள் அதிகாரம், எஸ்டிபிஐ உட்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்ம நூலை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
மேலும், நடிகை குஷ்பு மனுதர்ம நூலை முழுமையாக படிக்க வேண்டும் எனவும் தேவைப்பட்டால் அவருக்கு நூறு மனுதர்ம நூல்களை வாங்கி அனுப்ப தயாராக இருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தெரிவித்தனர்.
இந்த போராட்டத்தில் போது மனுதர்ம நூலை போராட்டக்காரர்கள் எரிக்க முயன்றபோது அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.