கோவையில் பட்டாசு உரிமம் வழங்க லஞ்சம் பெற்ற தீயணைப்பு அதிகாரி கைது - லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் விசாரணை!

கோவை: கோவையில் பட்டாசு உரிமம் வழங்க லஞ்சம் பெற்ற தீயணைப்பு அதிகாரியைக் கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.



கோவை: கோவையில் பட்டாசு உரிமம் வழங்க லஞ்சம் பெற்ற தீயணைப்பு அதிகாரியை கைது செய்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் ஏராளமானோர் பட்டாசு கடைகள் அமைத்து விற்பனையில் ஈடுபடுவது வழக்கம். பட்டாசு கடைகள் அமைக்க பல்வேறு நிபந்தனைகள் உள்ளன.

குறிப்பாக, கடை வைப்பதற்கான உரிமம் பெற விண்ணப்பம் பெற்று, அதில் 1 ரூபாய் நீதிமன்ற வில்லை ஒட்டப்பட்டு ஐந்து நகல்கள் எடுத்து மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம், தீயணைப்புத் துறை, போக்குவரத்து துறை, மாநகராட்சி அலுவலகம் என விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மேலும், கருவூலத்தில் 500 ரூபாய் செலுத்தி மாநகராட்சி ஊழியர்கள் குப்பை அள்ள 300 ரூபாய் வரி தொழில் வரி 750 என செலுத்தப்பட்ட பின்னர், இந்த ஆவணங்கள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு பட்டாசு விற்பனையில் ஈடுபடுபவர்கள் அனுப்பி வைப்பர். இதன் பின்னர் ஒவ்வொரு துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிமம் வழங்கப்படுவது நடைமுறையாகும்.

இந்த நிலையில், வரும் நவம்பர் மாதம் 14ம் தேதி தீபாவளி பண்டிகை வருவதையொட்டி பட்டாசு விற்பனை செய்ய அனுமதி கோரி குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த மதனவேல் என்பவர் விண்ணப்பித்து உள்ளார். இதற்கு அனுமதி தர 6,000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என கோவை தெற்கு தீயணைப்புத் துறை அதிகாரி சசிக்குமார் கேட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, மதனவேல் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அளித்துள்ளார். அப்போது, ரசாயன கலவை கலந்த பணத்தை மதனவேலிடம் கொடுத்து அனுப்பினர். 



லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி கணேஷ் தலைமையில் தீயணைப்புத் துறை அதிகாரி சசிகுமாரிடம் பணம் கொடுத்த போது மறைந்து இருந்து, அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், சசிகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...