கோவை: பெண்கள் குறித்து இழிவாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து அன்னையர் முன்னணி அமைப்பினர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்தனர்.
கோவை: பெண்கள் குறித்து இழிவாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து அன்னையர் முன்னணி அமைப்பினர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்தனர்.
மனுதர்மத்தில் பெண்கள் குறித்து சொல்லப்பட்டு இருக்கும் விடயங்கள் தொடர்பாக பெரியார் யூ டியூப் வலைக்காட்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசி இருந்தார்.
இதனிடையே, திருமாவளவன் இந்து தர்மத்தில் இல்லாதவற்றை பேசி பெண்களை இழிவுபடுத்தி இருப்பதாக பா.ஜ.க மற்றும் இந்துத்துவ அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கோவையில் இந்து முன்னணி அமைப்பின் மகளிர் அமைப்பான இந்து அன்னையர் முன்னணி சார்பில் இன்று மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
அப்போது, திருமாவளவன் மீது அளிக்கப்பட்ட புகாரின் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனில் பெண்களை திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்த இருப்பதாகவும், திருமாவளவன் தனது தவறுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் இந்து அன்னையர் முன்னணி அமைப்பினர் வலியுறுத்தினர்.