கோவை: கோவையில் தலைக்கவசம் அணியாமல் அதிவேகமாக வாகனத்தை இயக்கி வாகன விபத்து ஏற்படுத்திய 14 வயது சிறுவன் மற்றும் எதிரில் வாகனம் ஓட்டி வந்தவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் தலைக்கவசம் அணியாமல் அதிவேகமாக வாகனத்தை இயக்கி வாகன விபத்து ஏற்படுத்திய 14 வயது சிறுவன் மற்றும் எதிரில் வாகனம் ஓட்டி வந்தவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமுகை ஜடயாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார்(32). மேட்டுப்பாளையம் அரசு பேருந்து பணிமனையில் பயணிகள் இருக்கைகள் சரி செய்யும் பணியில் ஒப்பந்ததாரராக உள்ளார்.
இந்நிலையில், நேற்று மாலை 6:30 மணியளவில் மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் செல்லும் சாலையில் தனது ஹீரோ ஹோண்டா இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, மேட்டுப்பாளையம் பங்களா மேடு பகுதியை சேர்ந்த தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் கெளதம்(14) ஹோண்டா ஆக்ட்டிவா வண்டியில் தனது நண்பரான புருஷோத்தமனுடன் தலைக்கவசம் அணியாமல் வேகமாக பயணித்துள்ளார்.
அப்போது, நவீன்குமார் ஓட்டி வந்த வாகனத்தின் மீது நேருக்கு நேர் பலமாக மோதியதில் மூவரும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, நவீன்குமார் மற்றும் கெளதம் ஆகியோர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர்.
இவருடன் பயணித்த புருஷோத்தமன் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, உயிரிழந்த இருவரின் உடல் உடற்கூறு ஆய்விற்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தலைக்கவசம் அணியாமல் அதிவேகமாக வாகனத்தை இயக்கியதால் நேருக்கு நேர் மோதி மாணவன் மற்றும் ஒப்பந்ததாரர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.