உதகை நகராட்சியில் 3 மாத ஊதியம் வழங்காததை கண்டித்து தேசிய நெடுஞ்சாலையில் மறியல் - மூன்று மாநிலங்களின் போக்குவரத்து பாதிப்பு!

நீலகிரி: உதகை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மூன்று மாத காலமாக ஊதியம் வழங்காததை கண்டித்து உதகையில் இருந்து கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரமாக மறியலில் ஈடுபட்டதால் மூன்று மாநில போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


நீலகிரி: உதகை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மூன்று மாத காலமாக ஊதியம் வழங்காததை கண்டித்து உதகையில் இருந்து கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரமாக மறியலில் ஈடுபட்டதால் மூன்று மாநில போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சுற்றுலா நகரமான உதகை நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் அன்றாட தூய்மை பணிகளை மேற்கொள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் மட்டுமின்றி, தற்காலிகமாக 200 தூய்மை தொழிலாளர்களை நகராட்சி நிர்வாகம் ஒப்பந்தம் அடிப்படையில் பணியில் அமர்த்தியுள்ளது.

இவர்கள் அன்றாடும் தூய்மை பணிகளை மேற்கொண்டு நகரத்தை சுத்தம் செய்து வருகின்றனர். இந்நிலையில், உதகை நகராட்சியில் நிதி நெருக்கடி என காரணம் காட்டி 200 தற்காலிகத் தொழிலாளர்களுக்கு மூன்று மாத காலமாக சம்பளம் வழங்கப்படவில்லை.

இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டால் எவ்வித பதிலும் தராத நிலையில், தங்கள் குடும்பம் வறுமையில் தவிப்பதாகவும் மூன்று மாத சம்பளத்தை தற்போது உடனடியாக தர வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தற்காலிக தொழிலாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் உதகையில் இருந்து கேரளா, கர்நாடகா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பிங்கர் போஸ்ட் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நகராட்சி தூய்மை பணியாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு வாரத்திற்குள் மூன்று மாத கால சம்பளமும் கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்தனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...