கோவை: கோவையில் கொரோனா தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் யோகா பயிற்சி நடைபெற்றது.
கோவை: கோவையில் கொரோனா தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் யோகா பயிற்சி நடைபெற்றது.
தமிழக காவல்துறையில் பணியாற்றி வரும் காவலர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் யோகா பயிற்சிகள் அளிக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில், கடந்த 7 மாதங்களாக கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் யோகா பயிற்சிகள் துவங்கப்பட்டுள்ளது.

அதன்படி, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் சரகத்திற்கு உட்பட்ட காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கான ஒருநாள் யோகா பயிற்சி முகாம் சோமனூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை துவங்கியது. காலை 7 மணி முதல் 8.30 மணி வரை வழங்கப்பட்ட இந்த பயிற்சியில் 80க்கும் மேற்பட்ட ஆண் பெண் காவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த யோகா பயிற்சியினை கருமத்தம்பட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் சூரியமூர்த்தி துவங்கி வைத்தார். இந்த பயிற்சியின் போது மன அழுத்தத்தை குறைப்பது,பொது மக்களுடன் நல்லுறவைப் பேணுவது, நெருக்கடி சூழ்நிலையை கையாள்வது ஆகியவை தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் ஆலோசனைகள் வழங்கினர்.
கொரோனா வைரஸ் காரணமாக காவல் துறையினருக்கு இணையதளம் மூலம் நடைபெற்று வந்த யோகா பயிற்சி தற்போது மீண்டும் நேரடியாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
தமிழக காவல்துறையில் பணியாற்றி வரும் காவலர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் யோகா பயிற்சிகள் அளிக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில், கடந்த 7 மாதங்களாக கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் யோகா பயிற்சிகள் துவங்கப்பட்டுள்ளது.
அதன்படி, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் சரகத்திற்கு உட்பட்ட காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கான ஒருநாள் யோகா பயிற்சி முகாம் சோமனூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை துவங்கியது. காலை 7 மணி முதல் 8.30 மணி வரை வழங்கப்பட்ட இந்த பயிற்சியில் 80க்கும் மேற்பட்ட ஆண் பெண் காவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த யோகா பயிற்சியினை கருமத்தம்பட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் சூரியமூர்த்தி துவங்கி வைத்தார். இந்த பயிற்சியின் போது மன அழுத்தத்தை குறைப்பது,பொது மக்களுடன் நல்லுறவைப் பேணுவது, நெருக்கடி சூழ்நிலையை கையாள்வது ஆகியவை தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் ஆலோசனைகள் வழங்கினர்.
கொரோனா வைரஸ் காரணமாக காவல் துறையினருக்கு இணையதளம் மூலம் நடைபெற்று வந்த யோகா பயிற்சி தற்போது மீண்டும் நேரடியாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.