கோவையில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க புதிதாக 203 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்!

கோவை: கோவை மாநகர காவல்துறை ஆணையர்‌ உத்தரவின் பேரில், போத்தனூர் - இராமநாதபுரம் பகுதியில் 203 சிசிடிவி கேமராக்கள் புதிதாக பொருத்தப்பட்டது.



கோவை: கோவை மாநகர காவல்துறை ஆணையர்‌ உத்தரவின் பேரில், போத்தனூர் - இராமநாதபுரம் பகுதியில் 203 சிசிடிவி கேமராக்கள் புதிதாக பொருத்தப்பட்டது.

கோவை இராமநாதபுரம்‌ சந்திப்பில்‌ இருந்து D3, போத்தனூர்‌ காவல் நிலையத்திற்கு உட்பட்ட நஞ்சுண்டாபுரம் ரயில்வே மேம்பாலம்‌ நுழைவு வாயில்‌ வரை குற்றங்கள்‌ நடைபெறாமல் தடுக்கவும்‌ இப்பகுதிகளில்‌ குற்றங்கள்‌ நடைபெற்றால்‌ விரைந்து கண்டுபிடிக்கும்‌ பொருட்டும்‌ கேமராக்கள்‌ பொறுத்த கோவை மாநகர காவல்துறை ஆணையர்‌ சுமித்சரன்‌ இ.கா.ப அவர்கள்‌ உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், அவரது உத்தரவின்‌ படி நஞ்சுண்டாபுரம், S.NV கார்டன், கற்பகம்‌ கார்டன்‌, நேதாஜிநகர்‌, இராமலிங்க ஜோதிநகர்‌, ஸ்ரீபதிநகர் குடியிருப்போர்‌ நல சங்கங்களிடமும்‌ மற்றும்‌ முக்கிய அப்பார்ட்மென்ட்‌களான பார்சன்‌ அபார்ட்மென்ட்‌ மேபிளவர்‌ அபார்ட்மென்ட்‌ மற்றும்‌ முக்கிய வணிக நிறுவனங்களுடன்‌ CCTV கேமரா பொருத்துவது பற்றிய விழிப்புணர்வு கூட்டம்‌ D1 இராமநாதபுரம்‌ காவல் நிலைய சட்டம்‌ ஒழுங்கு காவல்‌ ஆய்வாளர்‌ முருகேசன்‌ அவர்களால்‌

நடத்தப்பட்டது.

இதன்‌ தொடர்ச்சியாக 21 அடிகள்‌ உயரம்‌ மற்றும்‌ கனமான இரும்பு பைப்புகள்‌ 55 நஞ்சுண்டாபுரம் சாலையில்‌ நடப்பட்டும்‌ முக்கியமாக SSVM பள்ளி ஸ்தாபனம்‌ பார்சன்‌ அபார்ட்மென்ட்‌ VR டிரேடர்ஸ்‌ ஆகியோர்கள்‌ மற்றும்‌ முக்கியஸ்ர்களின்‌ பங்களிப்புடன்‌ நஞ்சுண்டாபுரம்‌ பிரதான

சாலையின் மத்தியில்‌ 60 கேமராக்கள்‌ பொருத்தப்பட்டது.

இதன்‌ தொடர்ச்சியாக SNV கார்டன்‌ குடியிருப்போர்‌ நல சங்கத்தின் சார்பாக 32 கேமராக்களும்‌ அடிக்கடி திருட்டு சம்பவங்கள்‌ கடந்த காலங்களில் நடக்க முயற்சித்த பகுதியான கள்ளிமடை செல்லும்‌ வழியில் உள்ள கற்பகம்‌ கார்டன்‌ பகுதியில்‌ கற்பகம்‌ கார்டன்‌

குடியிருப்போர் நல சங்கத்தின்‌ சார்பாக 16 கேமராக்களும் நேதாஜி குடியிருப்பு பகுதிகளில்‌ 16 கேமராக்களும்‌ மேலும் பார்சன் அந்தாரா குடியிருப்பு பகுதிக்கு செல்லும்‌ வழியில் 5 கேமராக்களும், சிவராம்நகர்‌ பகுதியில்‌ சிவராம்நகர் குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பாக 54 கேமராக்களும்‌ என மொத்தம் 203 கேமராக்கள் தற்போது புதிதாக பொருத்தப்பட்டது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...