கோவை: கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (21). இவர் கொலை வழக்கில் கைது செய்யபட்டு சிறை சென்று திரும்பியவர்.
கோவை: கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (21). இவர் கொலை வழக்கில் கைது செய்யபட்டு சிறை சென்று திரும்பியவர்.
இவருக்கு சிறையில் இருந்தபோது, கஞ்சா விற்பனை தொடர்பாக கைது செய்யபட்ட கணபதி பகுதியை சேர்ந்த அமர்நாத் (21) மற்றும் மதுரையை சேர்ந்த வல்லரசு ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சண்முகதிற்கு 13 வயது சிறுமி இன்ஸ்டாகிராம் மூலம் நண்பராகி உள்ளார். இரண்டு தினங்களுக்கு முன்பு, சிறுமி காணாமல் போகவே பெற்றோர்கள் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.
இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், காணாமல் போன சிறுமி புலியகுளம் பகுதியில் இருப்பதாக தகவல் கிடைக்க பெற்றதை, தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் சிறுமியை மீட்டனர். தொடர்ந்து, போலீசாரின் விசாரனையில் சிறுமியை கடத்த சண்முகத்தின் நண்பர்களான அமர்நாத், வல்லரசு மற்றும் பெண் ஒருவர் உதவியது தெரியவந்தது.
இதனையடுத்து, சிறுமியை கடத்தி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், மூவரையும் கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தபட்டு சிறையில் அடைத்தனர். மேலும், சிறுமியை கடத்த உதவிய பெண்னை போலீசார் தேடி வருகின்றனர்.