கோவை: கிராம நிர்வாக அலுவலகத்தில் நடக்கும் குறை தீர்ப்பு கூட்டத்தில் மக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், பொள்ளாச்சி சப்-கலெக்டர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கோவை: கிராம நிர்வாக அலுவலகத்தில் நடக்கும் குறை தீர்ப்பு கூட்டத்தில் மக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், பொள்ளாச்சி சப்-கலெக்டர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா நோய் பரவல் காரணமாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் மற்றும் சார் ஆட்சியர் அலுவலகங்களில் நடக்கும் குறை தீர்ப்பு கூட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலாக அந்தந்த பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகங்களில், சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. பொதுமக்களிடம் உள்ள மனுக்களை, அந்தந்த கிராமபகுதியில் உள்ள கிராமநிர்வாக அலுவலர்கள் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இன்று பொள்ளாட்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில், சார் ஆட்சியர், வைத்திநாதன் தலைமையில், கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் உள்ள வருவாய்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைகூட்டம் நடைபெற்றது. அப்போது, இதுவரை பொதுமக்களிடம் இருந்து எத்தனை மனுக்கள் பெறப்பட்டுள்ளது? அந்த மனுக்களின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்ற விவரத்தை அவர் கேட்டறிந்தார்.
பின்னர், வாரம் தோறும் நடைபெறும் குறைதீர்ப்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு வருவாய்த்துறை அலுவலர்களுக்கு, அவர் அறிவுறுத்தினார்.
கொரோனா நோய் பரவல் காரணமாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் மற்றும் சார் ஆட்சியர் அலுவலகங்களில் நடக்கும் குறை தீர்ப்பு கூட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலாக அந்தந்த பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகங்களில், சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. பொதுமக்களிடம் உள்ள மனுக்களை, அந்தந்த கிராமபகுதியில் உள்ள கிராமநிர்வாக அலுவலர்கள் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இன்று பொள்ளாட்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில், சார் ஆட்சியர், வைத்திநாதன் தலைமையில், கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் உள்ள வருவாய்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைகூட்டம் நடைபெற்றது. அப்போது, இதுவரை பொதுமக்களிடம் இருந்து எத்தனை மனுக்கள் பெறப்பட்டுள்ளது? அந்த மனுக்களின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்ற விவரத்தை அவர் கேட்டறிந்தார்.
பின்னர், வாரம் தோறும் நடைபெறும் குறைதீர்ப்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு வருவாய்த்துறை அலுவலர்களுக்கு, அவர் அறிவுறுத்தினார்.