கோவையில் 80க்கும் மேற்பட்ட சிறைத்துறை காவலர்கள் பங்கேற்ற கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சார பேரணி - சிறைத்துறை டிஐஜி கொடியசைத்து துவக்கி வைத்தார்!

கோவை: கோவையில் 80க்கும் மேற்பட்ட சிறைத்துறை காவலர்கள் கலந்து கொண்ட கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சார பேரணியை சிறைத்துறை டி ஐ ஜி சண்முகம் சுந்தரம் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.


கோவை: கோவையில் 80க்கும் மேற்பட்ட சிறைத்துறை காவலர்கள் கலந்து கொண்ட கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சார பேரணியை சிறைத்துறை டி ஐ ஜி சண்முகம் சுந்தரம் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.



பண்டிகை காலம் என்பதால் பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இதனால் கோவையில் நோய்த்தடுப்பு நடவடிக்கையாக கோவை சிறைத்துறை காவலர்களின் விழிப்புணர்வு பிரச்சார பயணம் நடைபெற்றது.



இதில் வாகனத்தில் கொரோனா தடுப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பிரச்சார வாகனம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சென்றனர். மேலும், சிறைத்துறை காவலர்கள் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக முக்கிய சாலைவழியாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அணிவகுத்து சென்றனர்.



இந்த ஊர்வலத்தில் தனிமனித இடைவெளி, முகக்கவசம், கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்துதல் போன்றவற்றின் அவசியம் குறித்து மக்களிடம். பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. கோவை காந்திபுரம் பகுதியில் தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம், கிருமி நாசினி போன்றவை வழங்கப்பட்டது.



அதேபோல, கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் முன்பின் தெரியாதவர்களிடம் பேச வேண்டாம், உங்கள் உடமைகளை பாதுகாப்பாக வைத்து கொள்ளுங்கள். பொது மக்களுக்கு உதவ கோவை மாநகர காவல் துறையினர் சார்பாக ஆங்காங்கே மக்கள் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

மேலும், சந்தேகப்படும் நபர்களை உடனடியாக இந்த மையத்தில் புகார் அளிக்கலாம் என பிரச்சார வாகனத்தில் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சிறைத்துறை காவலர்களின் பேரணி அமைந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், ஜெயிலர் சிவராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...