நீலகிரி, முதுமலை அடுத்த தமிழக- கேரள எல்லையில் அமைந்துள்ளது வயநாடு. இயற்கை எழில் சூழ்ந்த இப்பகுதியில் யானை, காட்டெருமை, மான், சிறுத்தை என பல்வேறு உயிரினங்கள் வசித்து வருகின்றன.
இந்நிலையில், அப்பகுதியில் காட்டு யானை ஒன்று இறந்துகிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அப்பகுதிக்குச் சென்ற வனத்துறையினர் வயநாடுக்குட்பட்ட அதிரட்டுகுனி வயல் பகுதியில் காட்டு யானை ஒன்று இறந்துகிடப்பதை கண்டனர். தொடர்ந்து அதனை சோதனையிட்ட போது அதன் தலையில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்திருப்பதற்கான தடையம் தென்பட்டது.
இதுகுறித்து, வழக்கு பதிவு செய்து வனத்துறை மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வயநாடு அருகே வயல் பகுதியில் யானை நுழைந்து சேதப்படுத்தியதற்காக அதனைக்கொன்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அப்பகுதியில் காட்டு யானை ஒன்று இறந்துகிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அப்பகுதிக்குச் சென்ற வனத்துறையினர் வயநாடுக்குட்பட்ட அதிரட்டுகுனி வயல் பகுதியில் காட்டு யானை ஒன்று இறந்துகிடப்பதை கண்டனர். தொடர்ந்து அதனை சோதனையிட்ட போது அதன் தலையில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்திருப்பதற்கான தடையம் தென்பட்டது.
இதுகுறித்து, வழக்கு பதிவு செய்து வனத்துறை மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வயநாடு அருகே வயல் பகுதியில் யானை நுழைந்து சேதப்படுத்தியதற்காக அதனைக்கொன்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.