கோவை: கோவையில் இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று நூதன முறையில் நகைகளை திருடி சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை: கோவையில் இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று நூதன முறையில் நகைகளை திருடி சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை நாடார் வீதி பகுதியை சேர்ந்த சின்னசாமியின் மனைவி ஜெயலட்சுமி(68). கடந்த 16ம் தேதி மதியம் ஒரு மணியளவில் காந்திபுரம் நகர பேருந்து நிலையம் வந்து கொண்டிருந்தார்.
அப்போது, ஜெயலட்சுமியிடம் இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஜெயலட்சுமி கழுத்தில் இருந்த நகையை கழட்டி பத்திரமாக வைத்து கொள்ளும்படி கூறியுள்ளார். இந்த பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபடுபவர்கள் அதிகமாக உள்ளார்கள் என்றும் கூறி நம்ப வைத்துள்ளார்.
இதனை நம்பிய அவர் நகையை ஒரு பையில் போட்டு அந்த நபரின் இரு சக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். காந்திபுரம் பகுதியில் ஜெயலட்சுமியை இறக்கி விட்ட அந்த மர்ம நபர் நகைகளுடன் தப்பிச் சென்றார்.
பின்னர், இது குறித்து ஜெயலட்சுமி அளித்த புகாரின் பேரில் காட்டூர் போலீசார் அந்த மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.
கோவை நாடார் வீதி பகுதியை சேர்ந்த சின்னசாமியின் மனைவி ஜெயலட்சுமி(68). கடந்த 16ம் தேதி மதியம் ஒரு மணியளவில் காந்திபுரம் நகர பேருந்து நிலையம் வந்து கொண்டிருந்தார்.
அப்போது, ஜெயலட்சுமியிடம் இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஜெயலட்சுமி கழுத்தில் இருந்த நகையை கழட்டி பத்திரமாக வைத்து கொள்ளும்படி கூறியுள்ளார். இந்த பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபடுபவர்கள் அதிகமாக உள்ளார்கள் என்றும் கூறி நம்ப வைத்துள்ளார்.
இதனை நம்பிய அவர் நகையை ஒரு பையில் போட்டு அந்த நபரின் இரு சக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். காந்திபுரம் பகுதியில் ஜெயலட்சுமியை இறக்கி விட்ட அந்த மர்ம நபர் நகைகளுடன் தப்பிச் சென்றார்.
பின்னர், இது குறித்து ஜெயலட்சுமி அளித்த புகாரின் பேரில் காட்டூர் போலீசார் அந்த மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.