கோவையில் தேசிய பசுமைத்‌ தீர்ப்பாயத்தின்‌ நீதித்துறை உறுப்பினர்‌ தலைமையில்‌ திடக்கழிவு மேலாண்மை பணிகள்‌ குறித்த ஆய்வுக்‌ கூட்டம்‌!

கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ தேசிய பசுமை தீர்ப்பாயத்தின்‌ நீதித்துறை உறுப்பினர்‌ பி.ஜோதிமணி அவர்கள்‌ தலைமையில்‌ திடக்கழிவு மேலாண்மை பணிகள்‌ குறித்த ஆய்வுக்‌ கூட்டம்‌ இன்று துறைசார்ந்த அலுவலர்களுடன்‌ நடைபெற்றது.


கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ தேசிய பசுமை தீர்ப்பாயத்தின்‌ நீதித்துறை உறுப்பினர்‌ பி.ஜோதிமணி அவர்கள்‌ தலைமையில்‌ திடக்கழிவு மேலாண்மை பணிகள்‌ குறித்த ஆய்வுக்‌ கூட்டம்‌ இன்று துறைசார்ந்த அலுவலர்களுடன்‌ நடைபெற்றது.



இந்த ஆய்வுக்‌ கூட்டத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலா்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ முன்னிலை வகித்தார்.

இந்த ஆய்வுக்‌ கூட்டத்தில்‌ தேசிய பசுமைத்‌ தீர்ப்பாயத்தின்‌ நீதித்துறை உறுப்பினர்‌ அவர்கள்‌ தெரிவித்ததாவது,

கோவை மாநகராட்சியில்‌ அனைத்து மண்டலங்களிலிருந்தும்‌ பெறப்படும்‌ குப்பைகளை மக்கும்‌, மக்காத குப்பைகளை முறையாக தரம்‌ பிரித்து பெறவேண்டும்‌. இதற்கு மாநகராட்சி நிர்வாகத்தின்‌ சுகாதாரப்‌ பணியாளர்கள்‌ மற்றும்‌ சுகாதார அலுவலா்களின்‌ மேற்பார்வையில்‌ இப்பணிகள்‌ நடைபெற வேண்டும்‌. பொதுமக்களிடம்‌ மக்கும்‌, மக்காத குப்பைகளாக தரம்‌ பிரித்து தாமாகவே முன்வந்து தூய்மைப்‌ பணியாளர்களிடம்‌ வழங்க வேண்டுமென சுகாதார பணியாளர்கள்‌ தெரிவிக்க வேண்டும்‌.

உணவகங்கள்‌, வணிகவளாகங்கள்‌, குடியிருப்புகள்‌(அபார்ட்மென்ட்டுகள்‌) கடைகள்‌, மருத்துவமனைகளிலிருந்தும்‌ பெறப்படும்‌ மக்கும்‌, மக்கா குப்பைக்‌ கழிவுகளில்‌ ஒரு நாளைக்கு 100 கிலோவிற்கு அதிகமாக இருந்தால்‌ அவர்களே குப்பைகளை மேலாண்மை செய்து கொள்ள வேண்டும்‌. மாநகராட்சி தகுந்த அறிவியல்‌ சார்ந்த உதவிகளை செய்து கொடுக்கும்‌. வெள்ளலூர்‌ குப்பைக்கிடங்கிற்கு கொண்டு செல்லும்‌ குப்பைகளின்‌ அளவை குறைத்து கொள்ள தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்‌.

மேலும்‌, நுண்ணுயிர்‌ உரம்‌ தயாரிக்கும்‌ மையத்தின்‌ (Micro Composting Centre) பணிகள்‌ குறித்தும்‌, வெள்ளலூர்‌ குப்பைக்கிடங்கில்‌ சேகரிக்கப்படும்‌ குப்பைகளை சரியான முறையில்‌ திறந்தவெளியில்‌ தரம்‌ பிரித்த பின்னரே சேகரித்து வைக்க வேண்டும்‌. குப்பைகள்‌ குவியல்களாக குவித்து வைக்கப்படுவதை தவிர்க்க வேண்டும்‌, தூய்மையான மாநகராட்சியாக திகழ, சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும்‌ என தேசிய பசுமைத்‌ தீர்ப்பாயத்தின்‌ நீதித்துறை உறுப்பினா்‌ பி.ஜோதிமணி தெரிவித்தார்.



இந்த ஆய்வுக்‌ கூட்டத்தில்‌ துணை ஆணையாளர்‌ எஸ்‌.மதுராந்தகி அவர்கள்‌, மாநகரப்பொறியாளர்‌ ஆ.லட்சுமணன்‌, நகர்நல அலுவலர்‌ ராஜா, செயற்பொறியாளர்‌ ஸ்மார்ட்சிட்டி திட்டம்‌ சரவணக்குமார்‌, செயற்பொறியாளா்‌ ஞானவேல்‌, சுகாதார அலுவலர்‌ (தூய்மை இந்தியா திட்டம்‌) திருமால்‌ மற்றும்‌ அனைத்து மண்டல சுகாதார அலுவலா்கள்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...