கோவை: கோவை விமான நிலையம் சந்திப்பு சிட்ரா முதல் குரும்பபாளையம் வரை சாலை விரிவாக்கத்துக்கு, தேவையான நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக காளப்பட்டியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், தலைமையில் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை கூட்டம் நேற்று நடைபெற்றது.
கோவை: கோவை விமான நிலையம் சந்திப்பு சிட்ரா முதல் குரும்பபாளையம் வரை சாலை விரிவாக்கத்துக்கு, தேவையான நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக காளப்பட்டியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், தலைமையில் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை கூட்டம் நேற்று நடைபெற்றது.
கோவையில் இருந்து நீலகிரிக்கு மாற்று வழித்தடம் ஏற்படுத்தும் வகையில் விமான நிலைய சந்திப்பில் இருந்து காளப்பட்டி, குரும்பபாளையம் சாலை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இதில் முதல், கட்டமாக விமான நிலையம் சந்திப்பில் இருந்து குரும்பபாளையம் வரையில் 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.
தற்போது, 10 மீட்டர் உள்ள சாலை 22 மீட்டராக விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், முதல்கட்டமாக காளப்பட்டி, எஸ்.எஸ்.குளம் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
இது தொடர்பாக, சம்மந்தப்பட்ட பொது மக்களிடம், ஆட்சேபணை தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் நேற்று நேரில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இது குறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறுகையில், "இச்சாலை, விரிவாக்கம் செய்யப்பட்டால் கோவையில் இருந்து நீலகிரி செல்வதற்கு மாற்று வழிதடமாக அமையும். திருப்பூர், ஈரோடு, சேலம் உள்பட பகுதிகளில் இருந்து நீலகிரிக்கு செல்பவர்கள் நகருக்கு வர வேண்டியதில்லை. இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும்,’’ என்றனர்.