வெங்காய விலையை கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும், கோவை வியாபாரிகள் கோரிக்கை

கோவை: உயர்ந்து வரும் பெரிய வெங்காய விலையை கட்டுப்படுத்த, வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய வேண்டும், என கோவை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: உயர்ந்து வரும் பெரிய வெங்காய விலையை கட்டுப்படுத்த, வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய வேண்டும், என கோவை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவைக்கு வெளிமாநிலங்களான மகாராஷ்டிர, கார்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சுமார் 200 டன் பெரிய வெங்காயம் வரத்து வருகிறது. ஆனால், வடமாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, வெங்காயம் வரத்து கோவைக்கு வருவது வெகுவாக குறைந்துள்ளது.

இதனால், பெரிய வெங்காயத்தின் விலை தற்போது கிலோ ரூ.70 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து, டி.கே மார்க்கெட் அனைத்து காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், ‘‘இன்னும் சில நாட்கள் வெங்காயத்தின் விலை உயர்வு நீடிக்க வாய்ப்புள்ளது. எகிப்து, துருக்கி உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய வேண்டும். இல்லையென்றால், இன்னும் சில நாட்களில் வெங்காயத்தின் விலை உச்சத்திற்கு சென்றுவிடும்."

வெங்காய இறக்குமதி செய்யப்பட்டால், தற்போது விற்பனை செய்து வரும் விலை குறைந்து விடும். அதிகரித்து வரும், வெங்காய விலை காரணமாக, பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர், என்றார்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.06.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...