போக்சோ சட்டப்பிரிவை முழுமையாக பயன்படுத்துவது குறித்து கோவையில் போலீசாருக்கு பயிற்சி முகாம்

கோவை: போக்சோ சட்டப்பிரிவை முழுமையாக பயன்படுத்துவது தொடர்பாக, கோவை மாவட்ட மற்றும் மாநகர போலீசாருக்கு பயிற்சி முகாம், இன்று கோவை அவிநாசி சாலையில் உள்ள காவலர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது.


கோவை: போக்சோ சட்டப்பிரிவை முழுமையாக பயன்படுத்துவது தொடர்பாக, கோவை மாவட்ட மற்றும் மாநகர போலீசாருக்கு பயிற்சி முகாம், இன்று கோவை அவிநாசி சாலையில் உள்ள காவலர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது.



இதில், போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராதிகா கலந்துகொண்டு போக்சோ சட்டப்பிரிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

அப்போது, குழந்தைகள் குற்றப்பிரிவு எஸ்பி ஜெயஸ்ரீ கூறியதாவது:

போக்சோ வழக்குகள் அதிகரிப்பது, என்பது குற்றங்கள் அதிகரிப்பதாக அர்த்தமில்லை. அதன் மீதான விழிப்புணர்வு மக்களிடையே பெருகி வருவதையே காட்டுகிறது. ஏதாவது, ஒரு சூழ்நிலையில் குழந்தைகளை உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்து வீடுகளில் விடும் போது, பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இது குறித்து புரிதல் தற்போது பெற்றோரிடையே அதிகரித்து வருகிறது.

மேலும், இது குழந்தைகளுக்கான பாதிப்பு மற்றும் சமூக நீதிக்கான பாதிப்பாக இருந்தது. அதனை களைய போலீசார் நம்பிக்கை அளித்து வருகின்றனர். பாதிக்கப்படுவோருக்கு உரிய நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது, என்று அவர் கூறினார்.



இந்நிகழ்ச்சியில் மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண், மாவட்ட எஸ்.பி அருளரசு, கோவை மாநகர தலைமையக துணை ஆணையர் குணசேகரன், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சுந்தர், போலீசார் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...