உதயமாகிறது திருப்பூர் மாவட்டத்தின் மூங்கில் பூங்கா..! 30 வகையான மூங்கில் மரங்கள் காட்சிபடுத்தப்படுகிறது!

கோவை: மூங்கில் மிகவும் வேகமாக வளரக்கூடிய, அன்றாட வாழ்வில் தேவைப்படக்கூடிய பல்வேறு பொருட்களுக்கான மூலம், உணவு, காகிதம், கைவினை பொருட்கள், கட்டிடம் உள்ளிட்ட ஏறத்தாழ 1500 வகை பயன்பாடுகளை கொண்டது.


கோவை: மூங்கில் மிகவும் வேகமாக வளரக்கூடிய, அன்றாட வாழ்வில் தேவைப்படக்கூடிய பல்வேறு பொருட்களுக்கான மூலம், உணவு, காகிதம், கைவினை பொருட்கள், கட்டிடம் உள்ளிட்ட ஏறத்தாழ 1500 வகை பயன்பாடுகளை கொண்டது.

மூங்கில் காடுகளில் மட்டுமே விளைந்த மூங்கிலை ஒரு கட்டத்தில் காடுகளை காப்பாற்றும் பொருட்டு வெட்டுவதற்கு தடைவிதிக்கப்பட்டது. இதன் காரணமாக மூங்கிலை மூலப்பொருளாக கொண்டு உற்பத்தி செய்யப்படும் பல்வேறு பொருட்களின் உற்பத்தி பின்னடைவை சந்தித்தது.

இதனை உணர்ந்த மத்திய அரசு கடந்த 2006ம் ஆண்டு தேசிய மூங்கில் இயக்கத்தை (NATIONAL BAMBOO MISSION) துவங்கி கிராமப்புற பகுதிகள், குறிப்பாக விவசாயிகள் வாயிலாக மூங்கில் விளைவித்து உற்பத்தி செய்வதோடு, மூங்கில்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க செய்யவும், அதே சமயம் கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்தும் முயற்சியில் இறங்கியது.

உலகின் மூங்கில் உற்பத்தியில் இரண்டாம் நிலையில் உள்ளோம். இருப்பினும் இன்னும் இந்தியாவின் கிராமப்புற பகுதிகளை இதன் விளைச்சல் மற்றும் அதனால் ஏற்படும் பொருளாதார தன்னிறைவு பற்றிய விழிப்புணர்வு அதிகம் கொண்டு சேர்க்கப்படவில்லை என்பதால் 2 ஆண்டுகளுக்கு முன் தேசிய மூங்கில் இயக்கம் மறு சீரமைப்பிற்கு உள்ளாக்கப்பட்டு 1700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்திய வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம், ( INDIAN FOREST GENETIC and TREE BREEDING ORGANIZATION- IFGTB) தேசிய மூங்கில் இயக்கத்தில் ஒரு அங்கம், வெற்றி அமைப்பின் வனத்துக்குள் திருப்பூர் கடந்த ஒரு வருடமாக இந்த நிறுவனத்துடன் பல்வேறு மர வகைகளின் ஆய்விற்கு தேவைப்படும் களங்களை அமைத்து தருகிறது.

இந்த நிலையில், தேசிய மூங்கில் இயக்கத்தின் முன்னெடுப்புகளை திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகளிடம் கொண்டு செல்லும் முயற்சியாக திருப்பூர் மாநகராட்சி, வெற்றி அமைப்பு மற்றும் இந்திய வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்துடன் இணைந்து இடுவாய் கிராமத்தில் 12 ஏக்கர் பரப்பளவில் மூங்கில் பூங்கா அமைப்பதற்காக 6 மாதத்திற்கு முன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது,

இந்த நிலையில், நேற்றைய தினம் மூங்கில் பூங்காவிற்கான துவக்க விழா நடைபெற்றது. இந்த பூங்காவில் 30 வகையான மூங்கில் மரங்கள் வளர்க்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு அதன் தன்மை, வளர்ச்சி மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட தகவல்கள் காட்சிப்படுத்தப்படும்,

12 ஏக்கர் எல்லைகளும் மியவாக்கி முறையில் மரக்கன்றுகள் நடவு, குழந்தைகள் விளையாட பூங்கா, பட்டாம்பூச்சி பூங்கா, மூலிகை பண்ணை, திட கழிவு மேலாண்மை மாதிரி அமைப்பு, கழிவுநீர் மேலாண்மை மற்றும் மறுசுழற்சி உபயோகத்தை விளக்கும் மாதிரி அமைப்பு, நெகிழி இல்லா திருப்பூர் குறித்த விவரங்கள் உள்ள மாதிரி அமைப்பு, குளம் ஒன்று அமைக்கப்பட்டு தாமரை, அல்லி போன்ற மலர்கள் வளர்ப்பு, மழை நீர் சேகரிப்பு மாதிரி அமைப்பு ஆகியனவாகும்.

இன்னும் ஒரு வருடத்தில் மேலே குறிப்பிட்ட அனைத்தும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு மாநிலத்தில் ஒரு சிறந்த மூங்கில் பூங்காவாக உருவெடுக்கும். அதற்கான அனைத்து பணிகளையும் வெற்றி அமைப்பின் வனத்துக்குள் திருப்பூர் முன்னெடுத்து வருகிறது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...