கோவை: கோவை மாநகரில் திடீர் என பெய்த கனமழை காரணமாக மேம்பாலங்கள் கீழ் பகுதிகள் மற்றும் ரயில்வே பாலங்களில் மழை நீர் சாக்கடை நீருடன் தேங்கி நின்றது.
கோவை: கோவை மாநகரில் திடீர் என பெய்த கனமழை காரணமாக மேம்பாலங்கள் கீழ் பகுதிகள் மற்றும் ரயில்வே பாலங்களில் மழை நீர் சாக்கடை நீருடன் தேங்கி நின்றது.

கோவை காந்திபுரம், டவுன்ஹால், உக்கடம், வடகோவை, ஆலந்துறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று மதியம் சுமார் அரை மணி நேரமாக கனமழை பெய்தது.

இதில் கோவை ரயில்நிலையம் அருகே உள்ள லங்கா கார்னர் ரயில்வே பாலத்தில் மழை நீர்சூழ்ந்தது. இந்த நீருடன் சாக்கடை நீரும் கலந்ததால் சுமார் 2 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியது. அதே போல் அவினாசி மேம்பாலம் கீழ் பகுதி, கிக்கானி ரயில்வே பாலம், காட்டூர் ரயில்வே பாலம், வடகோவை மேம்பாலம் கீழ் பகுதி என பல இடங்களிலும் மழை நீர் தேங்கி நின்றது.

இதனால் வாகன ஒட்டிகள் மிகுந்த அவதியடைந்தனர். மாநகரின் அவினாசி மேம்பாலம், வடகோவை மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்பட்டது.