திருப்பூர்: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா பதவி விலக கோரி திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர்: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா பதவி விலக கோரி திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்து தரம் உயர்த்துவதாக தெரிவித்திருந்த அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவிற்கு தமிழகத்தின் அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், சிறப்பு அந்தஸ்து என்ற பெயரில் ஏழை எளிய மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் செயலை கைவிட வேண்டும், இதற்காக சூரப்பா பதவி விலக வேண்டும், தமிழக மருத்துவ மாணவர்களின் உள் இட ஒதுக்கீடு சட்டத்திற்கு தமிழக ஆளுநர் அனுமதி அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்து தரம் உயர்த்துவதாக தெரிவித்திருந்த அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவிற்கு தமிழகத்தின் அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், சிறப்பு அந்தஸ்து என்ற பெயரில் ஏழை எளிய மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் செயலை கைவிட வேண்டும், இதற்காக சூரப்பா பதவி விலக வேண்டும், தமிழக மருத்துவ மாணவர்களின் உள் இட ஒதுக்கீடு சட்டத்திற்கு தமிழக ஆளுநர் அனுமதி அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.