திருப்பூர்: திருப்பூரில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சார்பில் நடைபெற்ற சத்தான மற்றும் சரியான உணவுகளை உட்கொள்ளும் செயல்பாடுகள் குறித்த நிகழ்வை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.
திருப்பூர்: திருப்பூரில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சார்பில் நடைபெற்ற சத்தான மற்றும் சரியான உணவுகளை உட்கொள்ளும் செயல்பாடுகள் குறித்த நிகழ்வை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் நாடு முழுவதும் நடைபெறும் நிகழ்வின் ஒரு பகுதியாக, திருப்பூரில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், நாம் உண்ணும் உணவு சத்தானதாகவும் மற்றும் உடலுக்கு நன்மை தரக்கூடியவைதாக இருத்தல் மிகவும் அவசியம். சரியான நேரத்தில் சரியான உணவினை உட்கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் போன்ற தற்போதைய சூழ்நிலையில் நோய் எதிர்ப்பு சத்தியினை அதிகரிக்கும் வகையில், உணவை உட்கொண்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டும். மேலும் சத்தான, சரிவிகித மற்றும் தரமான உணவு பற்றிய விழிப்புணர்வினை பொதுமக்களிடையே கொண்டு சேர்ப்பது, நம் அனைவரின் கடமை என அறிவுறுத்தப்பட்டது.
மேலும், நிகழ்வில் பாரம்பரிய அரிசி ரகங்கள் வகைப்படுத்தி பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

அதேபோல், சிறு தானியங்களால் செய்யப்பட்ட உணவு வகைகள், உடலுக்கு எப்படி நன்மை பயக்கும் என்பதும் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் கண்காட்சியும் அமைக்கப்பட்டிருந்தது.
மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை, நுகர்வோர் அமைப்பினர், உணவக உரிமையாளர் சங்க பிரதிநிதிகள், உணவு வணிகர்கள், உணவு பாதுகாப்பு அலுவலர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் நாடு முழுவதும் நடைபெறும் நிகழ்வின் ஒரு பகுதியாக, திருப்பூரில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், நாம் உண்ணும் உணவு சத்தானதாகவும் மற்றும் உடலுக்கு நன்மை தரக்கூடியவைதாக இருத்தல் மிகவும் அவசியம். சரியான நேரத்தில் சரியான உணவினை உட்கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் போன்ற தற்போதைய சூழ்நிலையில் நோய் எதிர்ப்பு சத்தியினை அதிகரிக்கும் வகையில், உணவை உட்கொண்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டும். மேலும் சத்தான, சரிவிகித மற்றும் தரமான உணவு பற்றிய விழிப்புணர்வினை பொதுமக்களிடையே கொண்டு சேர்ப்பது, நம் அனைவரின் கடமை என அறிவுறுத்தப்பட்டது.
மேலும், நிகழ்வில் பாரம்பரிய அரிசி ரகங்கள் வகைப்படுத்தி பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
அதேபோல், சிறு தானியங்களால் செய்யப்பட்ட உணவு வகைகள், உடலுக்கு எப்படி நன்மை பயக்கும் என்பதும் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் கண்காட்சியும் அமைக்கப்பட்டிருந்தது.
மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை, நுகர்வோர் அமைப்பினர், உணவக உரிமையாளர் சங்க பிரதிநிதிகள், உணவு வணிகர்கள், உணவு பாதுகாப்பு அலுவலர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.