திருப்பூர்: பல்லடம் சார்பதிவாளரை கண்டித்து அனைத்து கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர்: பல்லடம் சார்பதிவாளரை கண்டித்து அனைத்து கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட மூன்று விவசாயிகளின் ரூ.50 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணம் மூலமாக பதிவு செய்ததை கண்டித்தும், அரசுக்கு சொந்தமான பி.ஏ.பி. கால்வாயையும், தனியாருக்கு பதிவு செய்ததற்காகவும், பல்லடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணி செய்யும் பணியாளர்களை உடனடியாக பணி இடமாற்றம் செய்யக் கோரியும், சட்டப்படியான ஆவணங்களை பதிவு செய்ய மறுப்பதுடன் ஆதாய நோக்கில் விவசாயிகளையும் பொதுமக்களையும் அலைக்கழிக்கும் போக்கை கண்டித்தும் பல்லடம் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே சார்பதிவாளரை கண்டித்து அனைத்து கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் திமுக, காங்கிரஸ், ம.தி.மு.க, மற்றும் சி.பி.எம் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட மூன்று விவசாயிகளின் ரூ.50 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணம் மூலமாக பதிவு செய்ததை கண்டித்தும், அரசுக்கு சொந்தமான பி.ஏ.பி. கால்வாயையும், தனியாருக்கு பதிவு செய்ததற்காகவும், பல்லடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணி செய்யும் பணியாளர்களை உடனடியாக பணி இடமாற்றம் செய்யக் கோரியும், சட்டப்படியான ஆவணங்களை பதிவு செய்ய மறுப்பதுடன் ஆதாய நோக்கில் விவசாயிகளையும் பொதுமக்களையும் அலைக்கழிக்கும் போக்கை கண்டித்தும் பல்லடம் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே சார்பதிவாளரை கண்டித்து அனைத்து கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் திமுக, காங்கிரஸ், ம.தி.மு.க, மற்றும் சி.பி.எம் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.