கோவை: தீபாவளி பண்டிகையொட்டி முதல்கட்டமாக கோவையில் இருந்து 42 சிறப்பு அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, கோவை அரசு விரைவுப் போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கோவை: தீபாவளி பண்டிகையொட்டி முதல்கட்டமாக கோவையில் இருந்து 42 சிறப்பு அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, கோவை அரசு விரைவுப் போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் நவம்பர் 14ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாப்பட உள்ளது. தமிழகத்தில் வருடம் தோறும் தீபாவளி பண்டிகையொட்டி மக்களின் வசதிக்காக அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.
இதன் அடிப்படையில், கோவையில் இருந்து முதல்கட்டமாக 42 சிறப்பு அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கோவையில் உள்ள அரசு விரைவுப்போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவையில் இருந்து சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கும்பகோணம், கன்னியாகுமாரி, ஓசூர், தருமபுரி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் சார்பாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, தீபாவளி பண்டிகையொட்டி முதல் கட்டமாக 42 சிறப்பு அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது."
அதன்படி, இதற்கான முன்பதிவும் துவங்கப்பட்டுள்ளது. பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும், என்றார்.
நாடு முழுவதும் நவம்பர் 14ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாப்பட உள்ளது. தமிழகத்தில் வருடம் தோறும் தீபாவளி பண்டிகையொட்டி மக்களின் வசதிக்காக அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.
இதன் அடிப்படையில், கோவையில் இருந்து முதல்கட்டமாக 42 சிறப்பு அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கோவையில் உள்ள அரசு விரைவுப்போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவையில் இருந்து சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கும்பகோணம், கன்னியாகுமாரி, ஓசூர், தருமபுரி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் சார்பாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, தீபாவளி பண்டிகையொட்டி முதல் கட்டமாக 42 சிறப்பு அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது."
அதன்படி, இதற்கான முன்பதிவும் துவங்கப்பட்டுள்ளது. பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும், என்றார்.