Exclusive: தீபாவளிக்கு கோவையில் இருந்து 42 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டம், அரசு விரைவுப்போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல்

கோவை: தீபாவளி பண்டிகையொட்டி முதல்கட்டமாக கோவையில் இருந்து 42 சிறப்பு அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, கோவை அரசு விரைவுப் போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


கோவை: தீபாவளி பண்டிகையொட்டி முதல்கட்டமாக கோவையில் இருந்து 42 சிறப்பு அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, கோவை அரசு விரைவுப் போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் நவம்பர் 14ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாப்பட உள்ளது. தமிழகத்தில் வருடம் தோறும் தீபாவளி பண்டிகையொட்டி மக்களின் வசதிக்காக அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.

இதன் அடிப்படையில், கோவையில் இருந்து முதல்கட்டமாக 42 சிறப்பு அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கோவையில் உள்ள அரசு விரைவுப்போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவையில் இருந்து சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கும்பகோணம், கன்னியாகுமாரி, ஓசூர், தருமபுரி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் சார்பாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, தீபாவளி பண்டிகையொட்டி முதல் கட்டமாக 42 சிறப்பு அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது."

அதன்படி, இதற்கான முன்பதிவும் துவங்கப்பட்டுள்ளது. பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும், என்றார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...