கோவையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவரின் வீட்டில் நுழைந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை!

கோவை: கோவையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவரின் வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை திருடி சென்றுள்ளனர்.


கோவை: கோவையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவரின் வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை திருடி சென்றுள்ளனர்.

கோவை பாப்பநாய்க்கன்பாளையம் தண்டபாணி நகர் பகுதியை சேர்ந்தவர் முரளி(50). கடந்த சில தினங்களுக்கு முன் இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து அவரது வீடு தனிமைபடுத்தப்பட்டது. இவரது வீட்டின் மாடியில் குடியிருந்து வந்த வழக்கறிஞர் கீர்த்திவாசன் வீட்டை பூட்டி வெளியூர் சென்று விட்டார். சிகிச்சை முடிந்து கடந்த 16ம் தேதி வீடு திரும்பிய முரளி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர், உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த உடைமைகள் சிதறி கிடப்பதை கண்டார்.

மேலும், லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 8 பவுன் தங்க நகைகள், ஒன்றரை கிலோ வெள்ளி மற்றும் 2300 ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்று உள்ளது தெரியவந்தது.

பின்னர், இது குறித்து முரளி பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். வீட்டில் ஆட்கள் இல்லாத நேரம் பார்த்து மர்ம நபர்கள் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...