பொள்ளாச்சியில் வி.கே.பழனிச்சாமி கவுண்டர் மணிமண்டபத்திற்கு அமைச்சர் எஸ் பி வேலுமணி அடிக்கல் நாட்டினார்..!

கோவை: மழைக்காலங்களில் வீணாகும் தண்ணீரை சேமிக்க ஆனைமலையாறு, நல்லாறு, பாண்டியாறு, புன்னம்புழா திட்டம் மற்றும் கோதாவரி காவிரி இணைப்புத் திட்டங்களை செயல்படுத்த, தமிழக அரசு தீவிர முயற்சி செய்து வருவதாக, தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.


கோவை: மழைக்காலங்களில் வீணாகும் தண்ணீரை சேமிக்க ஆனைமலையாறு, நல்லாறு, பாண்டியாறு, புன்னம்புழா திட்டம் மற்றும் கோதாவரி காவிரி இணைப்புத் திட்டங்களை செயல்படுத்த, தமிழக அரசு தீவிர முயற்சி செய்து வருவதாக, தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.



பொள்ளாச்சியில் இன்று பரம்பிக்குளம் ஆழியாறு அணைக்கட்டு தொடங்க காரணமாக இருந்த வி.கே.பழனிச்சாமி கவுண்டருக்கு ரூ.1 கோடியில், ஆழியார் அணை பூங்காவில் மணிமண்டபத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது.

கோவை,திருப்பூர் மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்ட பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தை கொண்டுவர காரணகர்த்தாவாக இருந்த, வேட்டைக்காரன் புதூர் பகுதியை சேர்ந்த வி.கே. பழனிச்சாமி கவுண்டர் அவர்களுக்கு 1 கோடி ரூபாய் மதிப்பில் திருவுருவ சிலை மற்றும் மணிமண்டபம் கட்டப்படும், என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதற்காக, பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் பூங்காவில் இடம் தேர்வு செய்து மணிமண்டபம் கட்டுவதற்கான பணியை இன்று தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

மேலும், தொடர்ந்து பொள்ளாச்சியில் ரூபாய் 2.75 கோடி மதிப்பில் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் - திருமண மண்டபம் கட்டுவதற்கான பணியையும் தொடங்கி வைத்து ரூபாய் 4.25 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கோவை திருப்பூர் மாவட்டங்கள் உள்ளடங்கிய 4.5 லட்சம் ஏக்கர் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான ஆனைமலையாறு நல்லாறு திட்டம் செயல்படுத்த, கேரளா மற்றும் தமிழக அரசு குழுக்கள் அமைத்து உள்ளதாகவும், பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், விரைவில் ஆனைமலையாறு நல்லாறு திட்டம், பாண்டியாறு புன்னம்புழா திட்டம், கோதாவரி காவிரி இணைப்பு திட்டம் செயல்படுத்த, தமிழக அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளரிடம் தெரிவித்தார்.

இந்த விழாவின் போது, தமிழக கால்நடைத்துறை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...