கோவை: ஊரடங்கு காலத்தில் ரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்தவர்களுக்கு, கோவை, வடகோவை, போத்தனூர், மேட்டுப்பாளையம் ரயில் நிலையங்களில் இருந்து ரூ.5.50 கோடி முன்பதிவுப் பயணச்சீட்டுக் கட்டணத் தொகை திருப்பி வழங்கப்பட்டுள்ளது, என ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கோவை: ஊரடங்கு காலத்தில் ரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்தவர்களுக்கு, கோவை, வடகோவை, போத்தனூர், மேட்டுப்பாளையம் ரயில் நிலையங்களில் இருந்து ரூ.5.50 கோடி முன்பதிவுப் பயணச்சீட்டுக் கட்டணத் தொகை திருப்பி வழங்கப்பட்டுள்ளது, என ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் ரயில்கள் சேவை நிறுத்தப்பட்டது. இதனிடையே, ரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்திருந்த பயணிகளில், இ-டிக்கெட் பெற்றவர்கள் கட்டண தொகையை அவர்களின் வங்கிக் கணக்கில் ரயில்வே நிர்வாகம் திருப்பி செலுத்தியது.
ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் மூலமாக மார்ச் 22ம் தேதிக்குப் பிறகு ரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்தவர்களுக்கு, அந்தந்த மையங்களிலேயே கடந்த ஜூன் 4ம் தேதி முதல் முன்பதிவு பயணச்சீட்டுகள் ரத்து செய்யப்பட்டு, அதற்குண்டான கட்டணங்கள் திருப்பித் தரப்பட்டு வருகின்றன.
இது குறித்து, கோவை ரயில்நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவை, வடகோவை, மேட்டுப்பாளையம், போத்தனூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் கடந்த ஜுன் 4ம் தேதி முதல் முன்பதிவுக் கட்டணத் தொகை திருப்பி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஜூன் 4ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் வரை 4 மாதங்களில், இதுவரை கோவை ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி கட்டணத் தொகை திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. வடகோவை, மேட்டுப்பாளையம், போத்தனூரில் ரூ.1.50 கோடி கட்டணத்தொகை திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மொத்தமாக கோவைப் பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களில் ரூ.5.50 கோடி முன்பதிவுப் பதிவுச் சீட்டுக் கட்டணத் தொகை திருப்பி வழங்கப்பட்டுள்ளது, என்றார்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் ரயில்கள் சேவை நிறுத்தப்பட்டது. இதனிடையே, ரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்திருந்த பயணிகளில், இ-டிக்கெட் பெற்றவர்கள் கட்டண தொகையை அவர்களின் வங்கிக் கணக்கில் ரயில்வே நிர்வாகம் திருப்பி செலுத்தியது.
ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் மூலமாக மார்ச் 22ம் தேதிக்குப் பிறகு ரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்தவர்களுக்கு, அந்தந்த மையங்களிலேயே கடந்த ஜூன் 4ம் தேதி முதல் முன்பதிவு பயணச்சீட்டுகள் ரத்து செய்யப்பட்டு, அதற்குண்டான கட்டணங்கள் திருப்பித் தரப்பட்டு வருகின்றன.
இது குறித்து, கோவை ரயில்நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவை, வடகோவை, மேட்டுப்பாளையம், போத்தனூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் கடந்த ஜுன் 4ம் தேதி முதல் முன்பதிவுக் கட்டணத் தொகை திருப்பி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஜூன் 4ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் வரை 4 மாதங்களில், இதுவரை கோவை ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி கட்டணத் தொகை திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. வடகோவை, மேட்டுப்பாளையம், போத்தனூரில் ரூ.1.50 கோடி கட்டணத்தொகை திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மொத்தமாக கோவைப் பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களில் ரூ.5.50 கோடி முன்பதிவுப் பதிவுச் சீட்டுக் கட்டணத் தொகை திருப்பி வழங்கப்பட்டுள்ளது, என்றார்.