கோவை: கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் ஆயுத பூஜையை முன்னிட்ட வரும் 22ம் தேதி முதல் கூடுதலாக 600 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக கோவை கோட்ட அரசு போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
கோவை: கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் ஆயுத பூஜையை முன்னிட்ட வரும் 22ம் தேதி முதல் கூடுதலாக 600 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக கோவை கோட்ட அரசு போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, அதன் பின் பொதுப்போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்ட போது கோவை கோட்டத்திற்கு உள்பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் 1,020 பேருந்துகள் இயக்கப்பட்டன.
பயணிகளின் எண்ணிக்கை அதிகமானதை அடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கோவை கோட்டத்தில் 300 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டது. அதன் அடிப்படையில், தற்போது 1,320 அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வரும் 25ம் தேதி ஆயுதபூஜை வருவதால், பயணிகளின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இது குறித்து, கோவை கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவை கோட்டத்தில் உள்ள 4 மாவட்டங்களில் மொத்தமுள்ள 2,641 பேருந்துகளில் தற்போது 1,320 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை மற்றும் முகூர்த்த தினங்களை முன்னிட்டு, கோவை கோட்டத்தில் வருகின்ற 22ம் தேதி முதல் கூடுதலாக 600 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கோவை, மதுரை, திருச்சி, கரூர், தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்து அதிகரிக்கப்படும்,’’ என்றார்.
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, அதன் பின் பொதுப்போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்ட போது கோவை கோட்டத்திற்கு உள்பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் 1,020 பேருந்துகள் இயக்கப்பட்டன.
பயணிகளின் எண்ணிக்கை அதிகமானதை அடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கோவை கோட்டத்தில் 300 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டது. அதன் அடிப்படையில், தற்போது 1,320 அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வரும் 25ம் தேதி ஆயுதபூஜை வருவதால், பயணிகளின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இது குறித்து, கோவை கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவை கோட்டத்தில் உள்ள 4 மாவட்டங்களில் மொத்தமுள்ள 2,641 பேருந்துகளில் தற்போது 1,320 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை மற்றும் முகூர்த்த தினங்களை முன்னிட்டு, கோவை கோட்டத்தில் வருகின்ற 22ம் தேதி முதல் கூடுதலாக 600 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கோவை, மதுரை, திருச்சி, கரூர், தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்து அதிகரிக்கப்படும்,’’ என்றார்.