மாற்று திறனாளிகளை அவமதிக்கும் வகையில் நடிகை குஷ்பூ பேசியதை கண்டித்து மாற்று திறனாளிகள் பாதுகாப்போர் சங்கத்தினர் காவல் நிலையத்தில் புகார்!

கோவை: மாற்று திறனாளிகளை அவமதிக்கும் வகையில் நடிகை குஷ்பூ பேசி உள்ளதை கண்டித்து மாற்று திறனாளிகள் பாதுகாப்போர் சங்கத்தினர் காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர்.


கோவை: மாற்று திறனாளிகளை அவமதிக்கும் வகையில் நடிகை குஷ்பூ பேசி உள்ளதை கண்டித்து மாற்று திறனாளிகள் பாதுகாப்போர் சங்கத்தினர் காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகை குஷ்பூ சமீபத்தில் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தார். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, காங்கிரஸ் கட்சி மூளை வளர்ச்சி இல்லாத கட்சி என விமர்சனம் செய்து இருந்தார்.

இந்த நிலையில், அரசியல் எதிரிகளை தாக்குவதற்கு மாற்றுதிறனாளிகளை அவமானப்படுத்திய திரைக்கலைஞர் குஷ்பு மீது வழக்கு பதிய வலியுறுத்தி கோவையில் மாற்று திறனாளிகள் பாதுகாப்போர் சங்கத்தின் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர்.

அந்த மனுவில், இத்தகைய வார்த்தைகள் மாற்று திறனாளிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாகவும் அறிவியல் ரீதியான குறைபாட்டை அரசியல் எதிரிகளை தாக்குவதற்காக மாற்று திறனாளிகளை அவமானப்படுத்திய திரைக்கலைஞர் குஷ்பு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என மாற்று திறனாளிகள் சங்கத்தினர் வலியுறுத்தினர்.

மேலும், இதுவரை குஷ்பு வருத்தம் தெரிவிக்காத நிலையில் உள்நோக்கத்துடன் அவர் இக்கருத்தை தெரிவித்து உள்ளார் எனவும் குஷ்பு மீது ஊனமுற்றோர் உரிமைகள் சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என அனைத்து காவல் நிலையங்களிலும் புகார் அளிப்பது என மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் முடிவெடுத்திருந்தனர்.

இந்நிலையில், கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட காவல் நிலையங்களில் இச்சங்கத்தின் தலைவர்கள் எஸ்.புனிதா, மகாலிங்கம் உள்ளிட்டோர் புகார் மனு அளித்தனர். முன்னதாக காவல்துறையினர் புகாரை வாங்க மறுத்ததால் வழக்கறிஞர்கள் துணையுடன் ஆன்லைனில் புகார் மனுக்களை பதிவு செய்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...