கோவை: இலங்கை போதை கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்கு ஜாமீன் கிடைத்தும் ஒரு வார காலமாக சிறையில் இருந்து வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கோவை: இலங்கை போதை கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்கு ஜாமீன் கிடைத்தும் ஒரு வார காலமாக சிறையில் இருந்து வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கோவை காளப்பட்டி பகுதியில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்த இலங்கை போதை பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா உயிரிழந்த விவகாரத்தில் போலி ஆவணங்களைத் தாக்கல் செய்து உடலை பெற்று தகனம் செய்த வழக்கில் அங்கொட லொக்காவின் காதலி என கூறப்படும் இலங்கை பெண் அமானி தாஞ்சி, மதுரையை சேர்ந்த பெண் வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி மற்றும் போலி ஆவணங்கள் தயாரிக்க உதவிய தியானேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அமானி தாஞ்சி சென்னை புழல் சிறையில் உள்ள வெளிநாட்டவர் பிரிவிலும், தியானேஸ்வரன் பெருந்துறை கிளை சிறையிலும், வழக்கறிஞரான சிவகாமி சுந்தரி கோவை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை டி.எஸ்.பி ராஜூ தலைமையில் ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 7ம் தேதி கோவை தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மூவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதனையடுத்து, தியானேஸ்வரன் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
ஆனால், இலங்கைப் பெண் அமானி தாஞ்சி மற்றும் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி ஆகியோருக்கு ஜாமீன் தர யாரும் உத்தரவாதம் அளிக்காததால் இருவரும் சிறையில் இருந்து வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, அமானி தாஞ்சிக்கு இருவர் உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் நாளை அல்லது நாளை மறுநாள் அவர் விடுவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல, வழக்கறிஞர் சிவகாமிக்கு ஒருவர் உத்தரவாதம் அளித்துள்ளதாக வழக்கறிஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை காளப்பட்டி பகுதியில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்த இலங்கை போதை பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா உயிரிழந்த விவகாரத்தில் போலி ஆவணங்களைத் தாக்கல் செய்து உடலை பெற்று தகனம் செய்த வழக்கில் அங்கொட லொக்காவின் காதலி என கூறப்படும் இலங்கை பெண் அமானி தாஞ்சி, மதுரையை சேர்ந்த பெண் வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி மற்றும் போலி ஆவணங்கள் தயாரிக்க உதவிய தியானேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அமானி தாஞ்சி சென்னை புழல் சிறையில் உள்ள வெளிநாட்டவர் பிரிவிலும், தியானேஸ்வரன் பெருந்துறை கிளை சிறையிலும், வழக்கறிஞரான சிவகாமி சுந்தரி கோவை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை டி.எஸ்.பி ராஜூ தலைமையில் ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 7ம் தேதி கோவை தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மூவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதனையடுத்து, தியானேஸ்வரன் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
ஆனால், இலங்கைப் பெண் அமானி தாஞ்சி மற்றும் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி ஆகியோருக்கு ஜாமீன் தர யாரும் உத்தரவாதம் அளிக்காததால் இருவரும் சிறையில் இருந்து வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, அமானி தாஞ்சிக்கு இருவர் உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் நாளை அல்லது நாளை மறுநாள் அவர் விடுவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல, வழக்கறிஞர் சிவகாமிக்கு ஒருவர் உத்தரவாதம் அளித்துள்ளதாக வழக்கறிஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.