கோவை குரும்பபாளையம் அருகே விறகு சேகரிக்க சென்றவர் மரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு!

கோவை: கோவை குரும்பபாளையம் அருகே விறகு சேகரிக்க சென்றவர் மரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை குரும்பபாளையம் அருகே விறகு சேகரிக்க சென்றவர் மரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பெருமாள்(48). இவரது மனைவி அனுராதா(45). இவர்கள் கோவை குரும்பபாளையம் பகுதியில் குடிசை அமைத்து தங்கி அந்த பகுதியில் கட்டிட வேலைகள் செய்து வந்தனர்.

கடந்த 11ம் தேதி சமைப்பதற்காக விறகு வெட்ட குரும்பபாளையம் காட்டு பகுதிக்கு இருவரும் சென்றுள்ளார். மரத்தின் மீது ஏறி மரக்கிளைகளை வெட்டிக் கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்தார். இதில் பெருமாளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அனுராதா கணவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளார். இதனிடையே, அங்கு சிகிச்சை பலனின்றி பெருமாள் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மதுக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...