கோவை: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், கடைகள் உள்ளிட்டவற்றில் குளிர் சாதன வசதியை பயன்படுத்த வேண்டாம், என மாநகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கோவை: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், கடைகள் உள்ளிட்டவற்றில் குளிர் சாதன வசதியை பயன்படுத்த வேண்டாம், என மாநகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கோவையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் தீவிர தடுப்பு நடவடிக்கையின் காரணமாக, கொரோனா பாதிப்பு தற்போது படிபடியாக குறைந்து வருகிறது. இதனை, மேலும் குறைக்கும் விதமாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தீவிர நோய் தடுப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பொதுவாக கொரோனா வைரஸ் குளிர்ச்சியான பொருட்களில் அதிக நேரம் உயிர் வாழும் என்பதால் மாநகராட்சி பகுதிகளில் இருக்கும் குளிர்சாதன வசதி கொண்ட கடைகளில் குளிர் சாதன வசதியை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
மேலும், கடைகளில் குளிர்சாதன வசதிக்கு பதிலாக மின்விசிறியை பயன்படுத்த வேண்டும். சீரான காற்றோட்டத்துக்கும், காற்று வெளியேறுவதற்கும் ஜன்னல் வசதியோ அல்லது ‘வெண்டிலேசன்’ வசதியோ செய்து இருக்க வேண்டும் என்று கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது, என்றார்.
கோவையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் தீவிர தடுப்பு நடவடிக்கையின் காரணமாக, கொரோனா பாதிப்பு தற்போது படிபடியாக குறைந்து வருகிறது. இதனை, மேலும் குறைக்கும் விதமாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தீவிர நோய் தடுப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பொதுவாக கொரோனா வைரஸ் குளிர்ச்சியான பொருட்களில் அதிக நேரம் உயிர் வாழும் என்பதால் மாநகராட்சி பகுதிகளில் இருக்கும் குளிர்சாதன வசதி கொண்ட கடைகளில் குளிர் சாதன வசதியை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
மேலும், கடைகளில் குளிர்சாதன வசதிக்கு பதிலாக மின்விசிறியை பயன்படுத்த வேண்டும். சீரான காற்றோட்டத்துக்கும், காற்று வெளியேறுவதற்கும் ஜன்னல் வசதியோ அல்லது ‘வெண்டிலேசன்’ வசதியோ செய்து இருக்க வேண்டும் என்று கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது, என்றார்.