கடைகளில் குளிர் சாதன வசதியை பயன்படுத்த வேண்டாம், சீரான காற்றோட்டம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும், மாநகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள்

கோவை: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், கடைகள் உள்ளிட்டவற்றில் குளிர் சாதன வசதியை பயன்படுத்த வேண்டாம், என மாநகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


கோவை: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், கடைகள் உள்ளிட்டவற்றில் குளிர் சாதன வசதியை பயன்படுத்த வேண்டாம், என மாநகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கோவையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் தீவிர தடுப்பு நடவடிக்கையின் காரணமாக, கொரோனா பாதிப்பு தற்போது படிபடியாக குறைந்து வருகிறது. இதனை, மேலும் குறைக்கும் விதமாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தீவிர நோய் தடுப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பொதுவாக கொரோனா வைரஸ் குளிர்ச்சியான பொருட்களில் அதிக நேரம் உயிர் வாழும் என்பதால் மாநகராட்சி பகுதிகளில் இருக்கும் குளிர்சாதன வசதி கொண்ட கடைகளில் குளிர் சாதன வசதியை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

மேலும், கடைகளில் குளிர்சாதன வசதிக்கு பதிலாக மின்விசிறியை பயன்படுத்த வேண்டும். சீரான காற்றோட்டத்துக்கும், காற்று வெளியேறுவதற்கும் ஜன்னல் வசதியோ அல்லது ‘வெண்டிலேசன்’ வசதியோ செய்து இருக்க வேண்டும் என்று கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது, என்றார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...