கோவை: வால்பாறையில் திரைப்படப் பாணியில் கிணற்றைக் காணவில்லை என்பது போல் நகராட்சி நிழற்குடையை காணவில்லை என பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: வால்பாறையில் திரைப்படப் பாணியில் கிணற்றைக் காணவில்லை என்பது போல் நகராட்சி நிழற்குடையை காணவில்லை என பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறையில் நகராட்சி அலுவலகம் முன் கடந்த 2012ம் ஆண்டு பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. இந்நிலையில் இன்று காலையில் நிழற்குடை முற்றிலுமாக இடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு இருந்தது. இதனையறிந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் எதிர்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, நகராட்சி ஆணையாளர் பவுன்ராஜ் அலுவலகத்தை விரிவுபடுத்த பழைய கட்டிடங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று இரவு பதினோரு மணி அளவில் துவங்கப்பட்ட இந்த நிழற்குடை பணி காலை நிறைவடைந்தது.

பகலில் இந்த பணியை செய்தால் போக்குவரத்து பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற நிலையில் இந்த பணியை தீவிரமாக முடிக்கப்பட்டது.
இதனை அறிந்த ஆணையாளர் உடனடியாக நேரில் வந்து அந்தப் பகுதியில் உள்ள நிழற்குடையை நவீன முறையில் கட்டித்தரப்படும் என்று கூறியதன் பேரில், அனைவரும் கலைந்து சென்றனர். மேலும், வால்பாறை பகுதியில் படகு இல்லம் மற்றும் தாவரவியல் பூங்கா போன்ற பணிகளை துரிதமாக செய்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயன்படும் வகையில் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதனை தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் வால்பாறையில் நகராட்சி அலுவலகம் முன் கடந்த 2012ம் ஆண்டு பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. இந்நிலையில் இன்று காலையில் நிழற்குடை முற்றிலுமாக இடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு இருந்தது. இதனையறிந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் எதிர்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, நகராட்சி ஆணையாளர் பவுன்ராஜ் அலுவலகத்தை விரிவுபடுத்த பழைய கட்டிடங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று இரவு பதினோரு மணி அளவில் துவங்கப்பட்ட இந்த நிழற்குடை பணி காலை நிறைவடைந்தது.
பகலில் இந்த பணியை செய்தால் போக்குவரத்து பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற நிலையில் இந்த பணியை தீவிரமாக முடிக்கப்பட்டது.
இதனை அறிந்த ஆணையாளர் உடனடியாக நேரில் வந்து அந்தப் பகுதியில் உள்ள நிழற்குடையை நவீன முறையில் கட்டித்தரப்படும் என்று கூறியதன் பேரில், அனைவரும் கலைந்து சென்றனர். மேலும், வால்பாறை பகுதியில் படகு இல்லம் மற்றும் தாவரவியல் பூங்கா போன்ற பணிகளை துரிதமாக செய்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயன்படும் வகையில் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதனை தெரிவித்துள்ளார்.