கோவை: கோவையில் பல்வேறு இடங்களில் நடைபெறும் மேம்பால பணிகள் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
கோவை: கோவையில் பல்வேறு இடங்களில் நடைபெறும் மேம்பால பணிகள் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
கோவையில் உக்கடம், ஆவாரம்பாளையம், திருச்சி சாலை, கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது.
இது போன்று நகரில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் மேம்பால பணிகள் காரணமாக விவசாயிகள் பால், காய்கறிகள் உள்ளிட்டவைகளை கொண்டு செல்லும் போது பாதிக்கப்படுகின்றனர், என விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறுகையில்:
கோவையில் மந்த நிலையில் நடைபெறும் மேம்பால பணிகள் காரணமாக கால்நடை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பால் எடுத்து செல்லும் விவசாயிகள், அதனை சரியான நேரத்திற்கு எடுத்து செல்ல முடிவதில்லை. காய்கறி விவசாயிகள், கூலி வேலைக்கு செல்லும் விவசாயிகள் போக்குவரத்து நெரிசலால் தினம் தினம் சிக்கி தவிக்கின்றனர். கால்நடை தீவனங்கள் கூட வருவதில் தாமதம் ஏற்படுகிறது.
சூலூர், சுல்தான் பேட்டை, காரமடை, மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நகர் பகுதிகளுக்கு வியாபாரம் செய்ய வரும் விவசாயிகள், குறிப்பிட்ட நேரத்திற்கு வரமுடியாததால் கீரை மற்றும் காய்கறி வாடி போய்விடுகின்றன. எனவே, அரசு முழு முயற்சி எடுத்து மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், என்றார்.
கோவையில் உக்கடம், ஆவாரம்பாளையம், திருச்சி சாலை, கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது.
இது போன்று நகரில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் மேம்பால பணிகள் காரணமாக விவசாயிகள் பால், காய்கறிகள் உள்ளிட்டவைகளை கொண்டு செல்லும் போது பாதிக்கப்படுகின்றனர், என விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறுகையில்:
கோவையில் மந்த நிலையில் நடைபெறும் மேம்பால பணிகள் காரணமாக கால்நடை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பால் எடுத்து செல்லும் விவசாயிகள், அதனை சரியான நேரத்திற்கு எடுத்து செல்ல முடிவதில்லை. காய்கறி விவசாயிகள், கூலி வேலைக்கு செல்லும் விவசாயிகள் போக்குவரத்து நெரிசலால் தினம் தினம் சிக்கி தவிக்கின்றனர். கால்நடை தீவனங்கள் கூட வருவதில் தாமதம் ஏற்படுகிறது.
சூலூர், சுல்தான் பேட்டை, காரமடை, மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நகர் பகுதிகளுக்கு வியாபாரம் செய்ய வரும் விவசாயிகள், குறிப்பிட்ட நேரத்திற்கு வரமுடியாததால் கீரை மற்றும் காய்கறி வாடி போய்விடுகின்றன. எனவே, அரசு முழு முயற்சி எடுத்து மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், என்றார்.