மக்காசோளத்தில் எதிர்பார்த்த மகசூல் கிடைக்காததால், பொள்ளாச்சி விவசாயிகள் கவலை

பொள்ளாச்சி: இந்தாண்டு, தென் மேற்கு பருவமழை உரிய நேரத்தில் பெய்ததால், மக்காசோளத்தில் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கவில்லை, என பொள்ளாச்சி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சி: இந்தாண்டு, தென் மேற்கு பருவமழை உரிய நேரத்தில் பெய்ததால், மக்காசோளத்தில் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கவில்லை, என பொள்ளாச்சி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். 

பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு, சொக்கனூர், சிங்கையன்புதூர் ஆகிய பகுதிகளில் மானாவாரி பயிரான மக்காச்சோளம் அதிக அளவில் விவசாயிகள் பயிரிட்டிருந்தனர்.

இந்தாண்டு சித்திரை மாதம் பயிரிடப்பட்ட மக்காச்சோளத்தில், சாகுபடியில் கதிர் வந்த நேரத்தில், மழை பெய்யாததால் மக்காச்சோளம் விளைச்சல் பாதிக்கப்பட்டது. மேலும், புரட்டாசி மாதம் மக்காசோளம் அறுவடை செய்யும் நேரத்தில், பெய்த மழை காரணமாக மக்காசோளம் அழுகும் சூழல் ஏற்பட்டுள்ளது, என விவசாயிகள் தெரிவித்தனர். 



இதனால், ஏக்கர் ஒன்றுக்கு 2.5 டன் மக்காச்சோளம் கிடைக்க வேண்டிய இடத்தில், தற்போது 1.5 டன் மட்டுமே மக்காச்சோளம் கிடைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். அதே நேரத்தில், கோழித்தீவனம், மாட்டுத்தீவனத்திற்கு வியாபாரிகள் நேரடியாக வந்து ஆண்டுதோறும் 100 கிலோ எடை கொண்ட மக்காச்சோளம் மூட்டையை 1800 ரூபாய் விலை கொடுத்து வாங்கிச் சென்றனர். 

ஆனால், இந்தாண்டு 1,400 ரூபாய் மட்டுமே விலை கொடுத்து வாங்கிச் செல்வதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மேலும், ஒரு ஏக்கருக்கு அறுவடை செய்ய 6 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்தும், எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை, எனவும் விவசாயிகள் வேதனைபட தெரிவித்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...