திருப்பூர்: திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள புதிய டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் 300க்கும் மேற்பட்டோர் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர்: திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள புதிய டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் 300க்கும் மேற்பட்டோர் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாநகரில் 57வது வார்டு பகுதியை சேர்ந்தது முருகம்பாளையம் எனும் பகுதி. இந்த பகுதியில் ஏற்கனவே 4 டாஸ்மாக் கடைகள் இருப்பதாகவும், தற்போது ஊருக்கே நடுவே அமைக்கப்பட்ட புதிய டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் 300க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிதாக அமைந்துள்ள டாஸ்மாக் கடையின் சுற்றுவட்டாரத்தில் 4 கோவில்கள் இருப்பதாகவும், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் 3 செயல்படுவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இந்த டாஸ்மாக் கடையால் கோவிலுக்கு வரும் பெண்களுக்கும், பள்ளிகளுக்கு செல்லும் மாணவ மாணவியருக்கும் மிகுந்த சிரமம் ஏற்படுவதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், புதிதாக அமைந்துள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் சார்பில் ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
திருப்பூர் மாநகரில் 57வது வார்டு பகுதியை சேர்ந்தது முருகம்பாளையம் எனும் பகுதி. இந்த பகுதியில் ஏற்கனவே 4 டாஸ்மாக் கடைகள் இருப்பதாகவும், தற்போது ஊருக்கே நடுவே அமைக்கப்பட்ட புதிய டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் 300க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிதாக அமைந்துள்ள டாஸ்மாக் கடையின் சுற்றுவட்டாரத்தில் 4 கோவில்கள் இருப்பதாகவும், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் 3 செயல்படுவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இந்த டாஸ்மாக் கடையால் கோவிலுக்கு வரும் பெண்களுக்கும், பள்ளிகளுக்கு செல்லும் மாணவ மாணவியருக்கும் மிகுந்த சிரமம் ஏற்படுவதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், புதிதாக அமைந்துள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் சார்பில் ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.