திருப்பூர்: திருப்பூரில் நாட்டுப்புற இசைக்கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கோரி, ஆட்சியர் அலுவலகம் முன்பாக மேலங்கள் முழங்க இசை அமைத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
திருப்பூர்: திருப்பூரில் நாட்டுப்புற இசைக்கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கோரி, ஆட்சியர் அலுவலகம் முன்பாக மேலங்கள் முழங்க இசை அமைத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் முழுவதும் சுமார் 5000க்கும் மேற்பட்ட நாட்டுபுற இசை கலைஞர்கள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 6 மாத காலமாக எந்த சுப நிகழ்ச்சியும், கோவில் திருவிழாக்களும் நடைபெறாத நிலையில் தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்த கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மங்கள இசை வாசித்து ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
சுப நிகழ்ச்சிகளில் மங்கள இசை கலைஞர்களுக்கு தடை இல்லாமல் செய்திட வேண்டும், கோவில் திருவிழாக்களில் கரகாட்டம், நாட்டுப்புற நையாண்டி மேளம் உள்ளிட்டவைகளை அனுமதித்திட வேண்டும், மூத்த கலைஞர்களுக்கு உதவித்தொகை கிடைத்திட வழி செய்ய வேண்டும், அரசு வழங்கும் விலை இல்லா இசைக்கருவிகளை மாவட்டத்திற்கு தலா 100 பேருக்கு வழங்கிட வேண்டும் உள்ளிட்டவைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்டம் முழுவதும் சுமார் 5000க்கும் மேற்பட்ட நாட்டுபுற இசை கலைஞர்கள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 6 மாத காலமாக எந்த சுப நிகழ்ச்சியும், கோவில் திருவிழாக்களும் நடைபெறாத நிலையில் தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்த கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மங்கள இசை வாசித்து ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
சுப நிகழ்ச்சிகளில் மங்கள இசை கலைஞர்களுக்கு தடை இல்லாமல் செய்திட வேண்டும், கோவில் திருவிழாக்களில் கரகாட்டம், நாட்டுப்புற நையாண்டி மேளம் உள்ளிட்டவைகளை அனுமதித்திட வேண்டும், மூத்த கலைஞர்களுக்கு உதவித்தொகை கிடைத்திட வழி செய்ய வேண்டும், அரசு வழங்கும் விலை இல்லா இசைக்கருவிகளை மாவட்டத்திற்கு தலா 100 பேருக்கு வழங்கிட வேண்டும் உள்ளிட்டவைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.